பக்கம்:பூவின் சிரிப்பு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

பூவின் சிரிப்பு




விருந்து, செவிக்கு விருந்து, இவை தப்பினால் வயிற்றுக்கு விருந்து என்றிருந்தால் உள்ளத்திலே கவலைக்கு இடமிருக்க முடியுமா? நான் அன்று உறங்கப் போகும் வரையில் இன்ப லோகத்திலே மிதந்து கொண்டிருந்தேன். அதனால் திருமண அமர்க்களமெல்லாம் முடிந்த பிறகு இரவு பதினொரு மணிக்கு எனக்கு என்றும் இல்லாத அளவில் உறக்கம் தள்ளிக்கொண்டு வந்தது.

வந்திருந்தவர்களுக்கெல்லாம் படுக்க வசதியாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடம் முழுவதும் ஒழுங்காக மெத்தைகள் விரிக்கப்பட்டிருந்தன. நான் அப்படியே ஒரு பட்டுத் தலையணையின்மேல் சாய்ந்தேன். அன்றைய நிகழ்ச்சிகளெல்லாம் ஓர் இன்பப் படக்காட்சி போல மனத்தின் முன் தோன்றித் தூக்க மயக்கத்தோடு கலந்து எனக்கு ஆழ்ந்த அமைதியை அளிக்கலாயின.

அந்த நொடியில்தான் என் துன்பம் தொடங்கலாயிற்று,

எனக்குப் பின்புறத்திலிருந்து எருமைக் கடா பெருமூச்சு விடுவதுபோல ஒரு இரைச்சல் கேட்டது. உறுமுவது போலும் குரல் வந்தது. எனக்கு ஐயம் கிளம்பிற்று. யாராவது எருமையையோ அல்லது பன்றியையோ கொண்டு வந்து இப்படி வேடிக்கை செய்யத் தொடங்கி விட்டார்களா என்று முதலில் நினைத்தேன். ஆனால் சற்று நேரத்தில் உண்மை வெளியாயிற்று. அந்த இரைச்சல் எனக்குப் பக்கத்திலே ஒரு வெண்பட்டு மெத்தையிலே சயனித்திருந்த பேர்வழியின் மூக்கிலோ அல்லது குரல் வளையிலோ எங்கேதானென்று திட்டமாய்க் கூறமுடி யாதபடி முரைச்சலிட்டுக் கொண்டு புறப்படுகிறதென்று தெரிய வந்தது.