பக்கம்:பூவும் கனியும்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



வளர்த்தேனே' என்பது பொருள் நிறைந்த பொன் மொழி. உடல் வலிமை இல்லாதவன் எல்லா வசதிகளும் பெற்றிருந்தாலும் தனக்கும் பிறருக்கும் முழுப்பயன் அற்றவனாகத்தான் இருக்க நேரிடும். எனவே எப்படியும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வழி வகை செய்துகொள்ளுங்கள்.

ஒப்புரவு
'ஒழுக்கம் விழுப்பம்

தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்

படும்'

என்ற பொய்யாமொழியையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.ஏட்டுப் படிப்பு அல்லது தொழிலறிவு ஆகியவற்றை ஊட்டுவதோடு கல்வி நிற்கக் கூடாது. அது நமக்குக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கற்பிக்க வேண்டும். ஒழுக்கம் என்னும் போது வழக்கமாகக் கூறும் ஐம்பெருங் குற்றங்களை நீக்குவதைமட்டும் நான் குறிக்கவில்லை; மக்களோடு மக்கள் எப்படிப் பழகுவது, எங்கெங்கு எப்படி நடப்பது, பொது இடங்களில் எப்படி நடப்பது என்பவைகளையும் சேர்த்துத்தான் குறிக்கிறேன். கட்டுப் பாடும் ஒழுங்கும் அற்ற அறிவாளி, கூடிய இடமெல்லாம் புரண்டோடிக் கண்டதையெல்லாம் பாழாக்கும்

— 16 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/22&oldid=492906" இலிருந்து மீள்விக்கப்பட்டது