பக்கம்:பூ மரங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘莎 வசந்தம் மலர்ந்தது. ரண Eர். சப்சிஜிஸ்ட்ரார் ஆபீஸும்,போலீஸ் ஸ்டேஷனும், ஏழானது வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் ஒன்றும், சின்னப் பள்ளிக்கூடங்கள் இரண்டும், பெரிய பெருமாள் கோயில், பெரிய சிவன் கோயில், இன்னும் பல சில்லரைக் கோயில் களும், பெரிய குளமும், நீண்டு நெளியும் வாய்க்காலும் இருந் தன. அமைதியும் குடியிருந்தது அந்த ஊரிலே. பகலிலும் அமைதி கொலுவிருக்கும் அவ்வூரில், இரவு ஏழு கணிக்கே நடுநிசி வாடை சூழும். தெருவுக்குத் தெரு இருளின் சிவப்புச் சிறு கண்கள்போல அந்தரத்திலே மினுக் குக் ஒளிச்சுடர்கள் உண்கையில் பஞ்சாயத்து போர்டார் தயவால் விழித்து நிற்கிற லாந்தக் கம்பங்களின் விளக்குச் சுடர்கள்தாம்! பஞ்சாயத்து போர்டாரின் சிக்கன மனே :ாகத்தின் விக் வாக சிலசமயங்களில் விளக்குகள் எட்டு, எட்டரை மணிக்கே அவிந்து போவதும் உண்டு. விளக்கு இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்; நமக்காவது சீட்டாட் டத்துக்கு உபயோகப்படட்டுமே!’ என்று கண்ணுடி முடி களுக்குன் அமர்ந்து கண் சிமிட்டி ஒளித்தவம் புரியும் சிறு விளக்கை தாராளமாக எடுத்துக்கொள்ளும் 'மைனர்ப் பின்னே'களும் உண்டு அந்த ஊரிலே, மணி பதிஒேன்று. அதனுல் இருள் ஆட்சி புரிந்துகொண் டிருந்தது அமைதியரங்கில். ஆணுல், அன்று வழக்கத்திற்கு விரோதமாக-அந்த ஊர்ச் சரித்திரத்தில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவங்களில் ஒன்ருக-திடீர் திடீரென ஒளி சிசித்து மேலே பாயும். வானத்து நட்சத்திரங்களை பழிப்புக் காட்டுவதுபோல் பல வண்ணப் பொறிகள் தெறித்து அற்புத மாகக் கீழிறங்கும். வால் நட்சத்திரம் போலக் கிளம்பி புஸ்ஸ் என்று மேலேறி நீந்தும் ஒளிக்கோடு ஒன்று. வாண வேடிக்கைகள் அழகுக்கோலம் ஒளிரச் செய்துகொண்டிருந் தது ஆடிக்கடி அமைதியோடு உறங்கி அசைந்த காற்றில் நாதஸ்வர அலைகள் மிதந்து வந்தன; ஊரின் மூலைக்கு மூலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/11&oldid=835703" இலிருந்து மீள்விக்கப்பட்டது