பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பெஞ்சமின் ஃபிராங்களினின்

ஜேம்ஸ் அந்த கவிதையை ஒரு சிறு புத்தகமாக அச்சு இயற்றி, அந்த புத்தகங்களை விற்பனை செய்ய தனது தம்பி பிராங்கிளினையே வேலை வாங்கி வந்தார். அவரும் தான் எழுதிய புத்தகங்களாயிற்றே என்ற ஆசையில் அவற்றை விற்பனை செய்து வந்தார்.

ஒரு கப்பல் தலைவன், தனது இரண்டு பெண்களுடன் கடலில் மூழ்கி இறந்து போன சோகமயமான கதையாக அந்த புத்தகம் அமைந்திருந்ததால், மக்களிடையே அப் புத்தகம் நல்ல பரபரப்புடன் விற்கலாயிற்று. அதனால் மீண்டும் ஒரு கப்பல் மாலுமியைப் பற்றிய மற்றொரு கவிதையை பெஞ்சமின் எழுதினார். அக்கவிதையும் ஒரு சோகக் கவிதையாகும்.

பெஞ்சமின் ஃபிராங்களினின் இவ்வாறே படிப்படியாக ஓர் எழுத்தாளராக மாறினார்.பகல் நேரம் எல்லாம் அச்சகத்தில் பணியாற்றிவிட்டு, மற்ற நேரங்களில் போஸ்டன் நகர வீதிகளில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக ஏறி இறங்கி கடுமையாக வேலைசெய்துவிட்டு, தனது கவிதைப்புத்தகங்களையும் விற்றுப் பணம் சேர்த்து, தனது அண்ணனுடைய அச்சகத்தை விரிவுபடுத்தியதோடு புகழையும் உருவாக்கி வந்தார். அதேநேரத்தில் பெஞ்சமினுடைய புகழும் வளர ஆரம்பித்தது. பெஞ்சமினின் இந்தக் கடுமையான உழைப்பு தமையன் ஜேம்சுக்கு மன எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியது. இதனால் அண்ணன் தம்பியிடையே அடிக்கடி மன உளைச்சல்களும் சண்டைகளும் குழப்பங்களும் உருவாயின.

போஸ்டன் நகரில் அப்போது, ‘போஸ்டன் செய்திக்கடிதம்’ 'Boston News Letter' பத்திரிகையும், 'Boston Gazetts'மற்றொரு வெளி வந்து கொண்டிருந்தன.