பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

பணக்காரர்கள் ஒவ்வொருவர் சார்பாக, அவர்களே தங்களது பணத்தில் வாளியையும் கித்தான் பையையும் விலைக்கு வாங்கிக்கொண்டு, நெருப்பணைப்புக் குழுக்களில் அவர்கள் தொண்டர்களாகச் சேர்ந்தார்கள்.

இந்த நெருப்பணைக்கும் குழுக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். இக்கூட்டத்துக்கு வரத்தவறும் தொண்டர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படும். இந்த அபராதப் பணத்தில்தான், அந்த தொண்டர்களுக்குரிய வண்டிகள், ஏணி கொளுவிகள் எல்லாம் வாங்கப்படுவதுண்டு.

இவ்வாறு ஆரம்பமான தீயணைப்புத் தொண்டர்கள் படை, நீர்த்தேக்கத் திட்டங்கள், ஏணி கொளுவிகள், ஃபையர் இன்ஜின் வண்டிகள், இதற்கான ஃபையர் ஸ்டேஷன்கள், இவற்றை இயக்கும் தனி துறை, எல்லாம் இன்றும் கண்டு, அவற்றின் பலனைக் குடிசை வாழ் மக்கள் அனுபவிக்கிறார்களே, அது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது பெஞ்சமின் ஃபிராங்ளின் என்ற புனிதனின் சிந்தனை வரலாறு அல்லவா இது?

பிலடெல்பியா நகரில் இருந்த காவல் துறையினர்மீது பெஞ்சமினுக்குப் போதிய மனநிறைவு இல்லை. ஏனென்றால், அவர்களில் பெரும்பகுதியினர் சாராய வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்தார் பெஞ்சமின்.

தேவைக்கேற்ப போலீஸ்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அவருக்குத் திருப்தியில்லை. அதனால் நிரந்தரமாகப் போலீஸ்காரர்களை அழைத்து, அவர்களுக்குரிய சம்பளத்தையும், மற்ற வசதிகளையும் வழங்கி வருவதுதான் சிறந்தது என்று யோசனை கூறினார் பெஞ்சமின். கூலிக்கு துணையாட்களை போலீஸ்காரர்கள் அழைத்துச் செல்வது, மக்களுக்குரிய நல்ல பாதுகாப்பாக அமையாது என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார்.