பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

33

அமெரிக்காவிலும் சரி, இன்றைய உலக நாடுகளிலும் சரி, பெஞ்சமின் கையாண்ட முறைதான் வாசகசாலை (Library) என்ற பெயரில் இன்றும் நடந்து கொண்டிருப்பதைப்பார்க்கிறோம்! படிக்கிறோம்.

ஃபிராங்கிளின், மக்களிடம் நூல் அறிவை உருவாக்கவே வாசகசாலையை ஆரம்பித்தார் என்பது மட்டுமல்ல; அஞ்சல் துறையிலேயும் அரிய திட்டங்களை ஆற்றியுள்ளார்.

பிலடெல்பியா நகரின் தபால் துறை விவரங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக பெஞ்சமினை நியமித்தது பிலடெல்பிய அரசு நிர்வாகம்; அத்துறையிலிருந்த கணக்கு வகைகளை புனரமைப்புச் செய்தார். பிலடெல்பியாவுக்கும் நியூயார்க்குக்கும் இடையே வாரம்ஒரு முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த அஞ்சல்கள் எல்லாம், பெஞ்சமின் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு வாரம் மூன்று முறையாக வழங்கஅதை மாற்றியமைத்தார்.

பிலடெல்பியா நகரிலிருந்து போஸ்டன் நகருக்கு ஓர் அஞ்சல் அனுப்பி, அதற்கு மூன்றே வாரத்திற்குள் பதில் கிடைக்கும் திட்டத்தை முதன்முறையாக அவர் அமல்படுத்தினார்.

அமெரிக்க குடியேற்ற நாடுகளிலுள்ள அஞ்சல் வழிகள் கரடுமுரடாயுள்ள மற்ற நெடுந்தூர அஞ்சல் பட்டுவாடாக்கள் அனைத்தையும் கவனிக்க அவர் குதிரை மேலேயே சவாரி சென்றார். வழிகளிலே உள்ள அஞ்சலகக் கணக்கு வழக்குகளை இடத்திற்கு ஏற்றவாறு மக்கள் கணக்குகளுக் குகந்தவாறு அவர் மாற்றியமைத்தார்.

குடியேற்ற நாட்டுத் தபால் வருவாய் திட்டங்கள் லாபகரமாக இயங்க என்னென்ன வழிகளுண்டோ அதற்கேற்ப செம்மைப்படுத்தி வருவாய் பெற வைத்தார்.

ந. மே-3