பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

35

குதிரைகள் மீது சவாரிசெய்து தனது பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்த ஃபிராங்களின், அவர் போஸ்ட் மாஸ்டராக மாறிய பின்பு அஞ்சலகங்கள் மூலமாகவே, பத்திரிக்கைகளைப் பட்டுவாடா செய்யும் முறையை, முதன் முதலாக, பத்திரிகை வரலாற்றிலே பெஞ்சமின் பிராங்ளின்தான் செய்து காட்டினார். இவ்வாறு பணியாற்றிட சிறு தொகையும் பெறப்பட்டது.

இந்த முறையால், தபால் துறையிலே உள்ள பெரிய அதிகாரி முதல் சிறிய ஊழியர்கள் வரை, அவரவர் தொழிலின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர் உணர வைத்தார்.

அஞ்சல்மீது எழுதப்பட்டுள்ள முகவரிகளின்படி அஞ்சலகம் வந்து கடிதங்களைப் பெறாதவர்களது பெயரை, முகவரியோடு தனது சஞ்சிகையிலே வெளியிட்டுப் பெற்றிக் கொள்ளச் செய்தார் ஃபிராங்ளின். இதற்குப் பிறகும்கூட, அந்த தபால்களைப் பெற்றுக்கொள்ள முகவர்கள் வராது போய், அக்கடிதங்கள் அங்கேயே தங்கிவிடுமானால், மூன்று மாதங்கள் சென்றபின்பு, அவை பிலடெல்பியா நகரிலுள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படும் முறையை முதன் முதலில் செயல்படுத்தியவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்தான். இவ்வாறுள்ள தபால் சேமிப்பு கிடங்கிற்கு என்ன பெயர் தெரியுமா; Dead Letter Office என்பதாகும்.

இந்த DLO என்கிற டெட் லெட்டர் ஆஃபிஸ் இன்றும் நம்மிடையே இருந்து கொண்டே பெஞ்சமின் புகழைப் பாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக பெரிய பதவியைப் பெற்ற பெஞ்சமினால், என்னென்ன நன்மைகள் அஞ்சல் துறைக்கும், பொது மக்கட்கும் ஏற்பட்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய சம்பவம் மட்டுமன்று.