பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

உண்மையை உணர்ந்த பெஞ்சமின், பைத்தியக்காரர்களுக்கு மருத்துவமனை தேவைதான்், அவர்களுக்குத் தங்கும் விடுதியும் அவசியம் வேண்டும் என்ற காரண காரியங்களை விளக்கி தனது வர்த்தமான சஞ்சிகையில் எழுதினார். இந்த பிரச்னையை சட்ட மன்றத்திற்கே கொண்டு சென்றார். சட்டசபை போதிய நிதியை வழங்கியது. 1753-ம் ஆண்டு அந்த மனநோய் மருத்துவமனையின் திறப்பு விழா நடந்தது. பெஞ்சமினே அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு தலைவரும் ஆனார். இந்த பைத்தியக்கார மருத்துவமனை, இன்றும் பென்சில்வேனியா மாநகரிலே இயங்கிக் கொண்டு வருகிறது.

இவ்வளவு சாதனைகளை ஒரு மனிதரால் ஆற்ற முடியுமா? என்று நினைத்தவர்கள் அவரை அணுகி எப்படி இவ்வளவு திறமையாகப் பணியாற்றுகிறீர்கள் என்று சிலர் கேட்டதற்கு, அதற்கு அவர், என் நேரத்தில் ஒரு வினாடியைக் கூட நான் வீணாக்கியது இல்லை. முன் தூங்கி முன் எழுதல் என்பதை எவன் கடைப்பிடிக்கின்றானோ அவன், நிச்சயமாய் வெற்றி பெறுவான் என்ற மனோதிடம் கொண்டவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்.

எந்த துறையில் ஈடுபட்டாலும் அவர், புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பவர். எந்த பிரச்னையே ஆனாலும், அதை எப்போதுமே ஆராய்ந்து கொண்டிருப்பவர்; இதற்கு அடையாளமாக, அவர் பல புதிய கண்டு பிடிப்புகளை உலகுக்கு வழங்கியிருக்கிறார்.

பெஞ்சமின் சிந்திக்காத விஷயங்கள் இல்லை; எதிர் காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதிலே மட்டும் அவர் சிந்தனை செல்லவில்லை. அவருடைய காலத்திலே இருந்த அறிவாளிகள் அனைவரையும், அவர்களுடைய ஆற்றல்களையும் அவர் நன்கு உணர்ந்து இருந்தவர்.