பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43

நிலங்களில், விவசாயிகள் பயிர்களை அறுவை செய்து கொண்டிருக்கும்போது, அவர்களது உடலிலே வியர்வைத் துளிகள் சிந்திச்சிந்தி அது உடலையே நனைத்துவிடும்.

இந்தக் காட்சியை பெஞ்சமின் ஒவ்வொருவர் உடலிலேயும் நேரிடையாகவே பார்த்தார். உடனே ஒரு சிந்தனை அவர் மூளையில் உதித்தது. ‘உடம்பில் நீராவியாகும் வியர்வைத் துளிகள் உடம்பை ஜில்லென்று குளிர்மையாக்கும்’ என்ற முடிவைக் கண்டார். இந்த குளிர்மையை நம்பி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

வெந்நீர், தேன், காடி, இவற்றைக்கொண்டு கொதி ஆவி கிளம்ப ஒரு பானகம் தயாரித்து; தர்மா மீட்டர் 100 டிகிரி உஷ்ண அளவைக் காட்டும்போது, அந்தப் பாணகத்தைக் குடித்தார்.

இந்த பானகத்தின் சக்தி வியர்வையைப் பெருகி எழச் செய்தது. ஆனால், அப் பானகம் ஜில்லென்ற-குளிர்ச்சியான உணர்ச்சியைப் பருகியவுடன் கொடுத்தது. இந்த ஆய்வுக் கருவை பெஞ்சமின் நன்கு சோதனை செய்தார். ஏனென்றால், பிலடெல்பியா பட்டினம் வெயில் காலத்தில் வெப்பமாய் இருக்கும். அந்த வெப்பம் தன்னைத் தாக்கும் போது அதைத் தடுப்பது எப்படி என்பதற்காகவே, இந்த சோதனையின் கொதி ஆவி பானகத்தைக் கண்டுபிடித்தார்.

இன்றைக்கும் நாம், மழைக் காலங்களில் நமது உடலைச் சூடேற்றிக் கொள்ள, தேநீர் காஃபி, சுக்கு காஃபி போன்ற சூடான பானங்களைக் குடிக்கிறோம் இல்லையா? இதற்கு மூலமே பெஞ்சமின் மூளைதான்.

அதே போல கோடைக்காலம் வந்ததும், கொக்கோ கோலா, பெப்சி, பாதம்கீர், ரச்னா, மோர் போன்ற பிற குடிநீர் பொருட்களையும் ஜில்லென ஐஸ் கட்டி கலந்து குடிக்கிறோமே மறக்க முடியுமா அதனை?