பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

இதற்கு எல்லாம் அடிப்படைகளான பானகக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த மக்கள் நல்வாழ்த்துறை மாமனிதன் பெஞ்சமின் ஃபிராங்களின் என்றால் ஆச்சரியப்படமாட்டீர்கள்!

கோடைக் காலத்தில் வெயில் நம்மை வாட்டி வேதனையாக்கி விடுகின்றது. அப்போது துணிகள் எல்லாம் நனைந்து, துணி உவர் நீராய் மாறி, சிலருடைய உடலில் ஒருவித கத்தாய் நாற்றத்தையும் எழுப்புவதையும் நாம் இன்றும் பார்க்கிறோம்.

பெஞ்சமின் ஃபிராங்ளின், இந்த நாற்றம் உடலை எவ்வாறு நாறடிக்கிறது என்பதையும் அதனால், பிறரிடம் நாம் முகம் கூட காட்ட முடியாமல் பிறரது ஏளனச் சொற்களுக்கு ஆளாகும் நிலை உருவாகி, பலர் முன்னால் முணு முணுக்கும் சூழ்நிலையும் நமக்கு வருகின்றது.

இதற்கு என்ன காரணம் என்பதை பெஞ்சமின் குளிர் காலத்திலே சோதனை செய்தார். கறுப்புத்துணி, இருள் நீலம் துணி, மெல்லிய நீலம் துணி, வெள்ளை நிறம் போன்ற துணிகளை சிற்சில சிறிய துண்டுகளாக வெட்டி அப்போது தரையில் தேங்கி படர்ந்திருக்கும் உறை பனி மீது, சூரிய கதிர்களுக்கு நேராக, கீழே, அந்த துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்தார். என்னவாயிற்று தெரியுமா அந்த துணிகள்? பாருங்கள் பிராங்ளினின் சோதனை அறிவை!

கீழே உறைபனிமீது சூரிய கிரணங்களுக்கு எதிராகப் பரப்பிய கறுப்பு நிறத்துணி, விரைவாகவே உருகி பனியில் அமிழ்ந்து விட்டது. கருநீல நிறத்துணியும் அதைவிடக் கொஞ்சமாகப் பனியில் உருகிப் புதைந்து போயிற்று. மெல்லிய நீல நிறத்துணியின் கதி என்ன தெரியுமா?