பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

61

இந்த தடைவிதிப்பைக்கண்டு சிவப்பு இந்தியர்கள் மன வருத்தமும், முணுமுணுப்பும் கொண்டு உற்சாக ஆற்றலை இழந்தார்கள். இதைக் கண்ட பெஞ்சமின், உடன்படிக்கை முடிந்தவுடன் சிவப்பு இந்தியர்கள் தாராளமாக ‘ரம்’ பானம் அருந்தலாம் என்ற உத்தரவை மறுகணமே பிறப்பிக்க வைத்தார்.

அவ்வளவுதான், சிவப்பு இந்தியர்கள் உடன்படிக்கையை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க உழைத்தார்கள். பெஞ்சமின் ஒப்பந்தமும் வெற்றி பெற்றது; மீண்டும் சிவப்பு இந்தியர்கள் ரம் பானரானார்கள்.

சிவப்பு இந்தியரோடு பெஞ்சமின் உடன்படிக்கையை நிறைவேற்றியதைப்பற்றிச் சட்டசபை பெரிதும் மகிழ்ச்சியுற்றது! நிலைமையை வெகுசாமர்த்தியமாகக் கையாண்ட ராஜதந்திரி அவர் என்று மக்களால் பெரிதும் போற்றிப் புகழப்பட்டார். ஆனால், சிவப்பு இந்தியர் ஒப்பந்தம் பற்றி எழுந்த சட்டசபைத் தகராறுகள் சம்பந்தமாக பெஞ்சமின் இலண்டன் மாநகரம் செல்ல வேண்டும் என்று அவரையே தூதுக்குழுவுக்குத் தலைவராக நியமித்து அனுப்பி வைத்தது.

தனது மகனான வில்லியமும், பெஞ்சமினும் கி.பி. 1775-ம் ஆண்டு மார்ச் மாதம் இலண்டன் மாநகருக்குப்புறப்பட்டுச் சென்றார்கள். கப்பல் பிரயாணம் அவர்களுக்குப் பெரும் கஷ்டமாக இருந்தது. கி.பி. 1775-ம் ஆண்டு ஜூலை மாதம் தகப்பனும் மகனும் இலண்டன் நகரை வந்து அடைந்தார்கள்.

இலண்டனிலே உள்ள க்ரேவன் என்ற ஒரு விதவை வீட்டிலே பெஞ்சமினும் மக்னும் வந்து தங்கினார்கள்.வில்லியம் சட்டக்கல்வி படிப்பதற்கு மிடில்டெம்பிள் என்ற கல்லூரியிலே சேர்ந்து படித்தார்.