பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா சுயநலமாகவே பாவித்து, வளர்த்துக் Grror வேண்டும். சுயநலத்தின் சிகரத்திலே தேகத்தைக் காத்து, அதனை பொது நலத்திற்காக, தாயகம் காக்கும் பெரும் பணிக்காக உதவ வேண்டும் என்பதே எனது ஆசையாகும். இந்த ஆசையால் எழுந்த இலட்சியத்தால்தான், இந்த நூலை உருவாக்கி உங்களிடம் தந்திருக்கிறேன். பேரழகு பெறுகிற பெருமையும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்று வழிகாட்டியிருக்கிறேன். வாழ்க அழகு சமுதாயம் . வளர்க வலிய சமுதாயமாக என்று வாழ்த்துகிறேன். டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா.