பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா - - == மழலையும மாாபகமும உலகில் உள்ள சிறந்த மருத்துவ நிபுணர்கள் அனைவருமே ஏகமனதாக ஒத்துக் கொள்கிறார்கள். பெண்கள் குழந்தை பெறுவதுதான் முறை என்று. குழந்தை ஒன்று பெற்று விட்டால் அழகு போய் விடும். சின்ன இடை பிடி இடையாகிவிடும். முன் பார்த்து நின்ற மார்பகங்கள் மண் பார்க் கத் தொடங்கிவிடும். ஆங்காங்கே உள்ள அழகு நிறைந்த அவயங்கள் எல்லாம் நளினம் இழந்து நாசமாகி விடும் என்ற ஒர் தவறான எண்ணம் எல்லோரிடையிலும் இருக்கத்தான் இருக்கிறது. அழகு போகாது... அழகு கொஞ்சம் கலைந்து இருக்கும். அவி வளவுதான். ஆனால், கலைந்த அழகை மீண்டும் கொண்டு வந்துவிடலாம். முயற்சி செய்தால்! உழைப்பிருந்தால் - நோக்கமும் நுணுக்கமும் செயலில் இருந்தால்! # அழகை எப்படிக் கொண்டு வருவது? அதற்கு ஒரே வரியில் பதில் ...உண்மையான தாயாக வாழ வேண்டும். பெற்றெடுத்தத் தன் குழந்தையை, பெருமையாய் , பேரன் புடன், புளகாங் கிதத்துடன் போற் றிக் காக்க வேண்டும். பாராட்ட வேண்டும். சீராட்ட வேண்டும். தாலாட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும். என்ன? பாலூட்டுவதா? பாழாகிப் போகாதா மார்பகங்கள்? ஐயய்யோ? என்ன இதெல்லாம்? என்று சிலர் கேட்கலாம். துடிக்கலாம். பதட்டப்படவோ, பயப்படவோ தேவையில்லை.