பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே அந்த ஆதரவாளர்கள் சில பேரும் மிசா நேரத்தில் தி. மு. கழகத்திற்குச் சோதனை வந்தபோது அவர்களும் மடக்கப் பட்டு, மிசாக் கைதிகளாகப் பல்வேறு சிறைச்சாலைகளிலே இருந் தார்கள். அப்படி இருந்தவர்களில் சிலர் வேலூர் சிறையிலே இருந்தார்கள். நல்லவேளையாக மதுரைச் சிறைச்சாலையிலே இருந்த தென்னரசு திடீரென்று மாறுதல் செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். -

வேலூர் சிறையில் தென்னரசு ரே ைக பார்த்ததற்குக் காரணம் - சில பேர் தங்களுக்கு இனி விடுதலையே கிடையாது என்று எண்ணி மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற் காகத்தான் அவர்களுக்கெல்லாம் ரேகை பார்த்து பயப்படாதீர் அடுத்த மாதம் உங்களுக்கு விடுதலை வந்துவிடும் என்று இப்படி ஆறேழு மாதம் சொல்லிச் சொல்லி அவர்களையெல்லாம் பயப் படாமல் சிறைச்சாலையில் உறுதியாக இருக்க அவர் கையாண்ட தந்திரம் கை ரேகையே தவிர அதிலே அவருக்கும் நம்பிக்கை இல்லை. எனக்கும் நம்பிக்கை இல்லை. யாருடைய கையை யாவது நீட்டச் சொன்னல் ஏமாந்து கைகளை நீட்ட வேண்டா மென்று நான் இப்போதும் தெரிவித்துக்கொள்கிறேன். -

தென்னரசைப் போன்ற ஆரம்ப காலத்திலேயிருந்து இந்த இயக்கத்திலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சுயமரி யாதைக்காரர்கள் ஜாதகத்திலோ, ஜோஸ்யத்திலோ, ரேகை யிலோ நிச்சயமாக நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அவைகள் எல்லாம் மக்களை ஏமாற்ற நடத்தப்படுகின்ற தொழில்கள்: என்பதை நாங்கள் உணர்ந்தவர்கள். அதையும் மீறி உங்க ளுடைய மனத் திருப்திக்காக யாராவது ரேகை பார்த்தால், யாராவது ஜோஸ்யம் பார்த்தால் அதிலே உங்களுக்கு ஒரு திருப்தி. இன்றைக்கு இருக்கின்ற கஷ்டம் நாளைக்காவது: போகாதா? அடுத்த வாரமாவது போகாதா? என்பதில் ஒரு திருப்தி - அந்தத் திருப்திக்குத் தீனி போடுபவர்களாக ஜோஸ்யர்கள் இருக்கின்ற காரணத்தால் அந்தத் தொழில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த ஒன்றின் காரணமாகத்தான் தென்னரசு ரேகை பார்த்தாரே, அல்லாமல் வேறல்ல. . -

ரேகை பார்த்த ஆற்றலை மாத்திரம் குறிப் பி ட் ட்ால், போதாது. இங்கே தா. கிருஷ்ணன் அவர்களும், தவத்திரு. அடிகளார் அவர்களும், துணைப்பொதுச்செயலாளர் அவர்களும் எடுத்துக் காட்டியதைப் போல எத்தனை முறை தென்னரக், சிறைச்சாலைக்குச் சென்ருர் ஒவ்வொரு முறையும் அது அண்ணு அவர்களுடைய காலமாக இருந்தாலும் சரி-அல்லது அண்ணு.

134