பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாத் தலைவர்களும் சிறைச்சாலை உடைகளைத் தவருமல் அணிந்து வந்திருப்பார்கள். அதைப்போலவே அண்ணு அவர்களும் வேலூர் சிறைச்சாலையில் சிறையில் தந்த உடை களை ஒரு சாதாரணக் கைதியைப்போல் தவருமல் அணிந்து வந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

வடக்கே இமயமலைச்சாரலில் சீனப் படையெடுப்பு தீவிர மாகி நமக்கும், சீனாவிற்கும் போர்மூளும் கட்டம் வந்து விட்டது. இந்த நேரத்தில் இந்தியாவிற்குள் கட்சிகளுக்குள் ளேயே பேதம் கூடாது என்று அண்ணு விரும்பினர். அதிை மனதிலே வைத்துக் கொண்டு வடக்கே ஏற்பட்ட எல்லைப் போராட்டத்திற்கு தி. மு. க. இந்திய அரசுக்கு பரிபூரணமாய் ஆதரவு அளிக்கும் என்றும், வெளியிலிருக்கும் தி. மு. க. தொண்டர்கள் இரத்ததானம் அளிக் க வேண்டுமென்றும் ஆணையிட்டார். .

அண்ணுவின் அறிக்கை வந்த இரண்டு மூன்று தினங் திளில் சர்க்கார் எங்களைத் திடீரென்று விடுதலை செய்துவிட்டது. "எங்களுக்கு நான்கு மாதங்களுக்குத் தண்டனை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. அதில் மூன்று மாதத்தை நாங்கள் சிறையில் கழித்து விட்டோம். - .

3. சிறைச்சாலை விதிகளின்படி வருமானவரி கட்டுகிறவர் களுக்கும், படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும்தான் சிறையில் முதல்வகுப்பு வசதி உண்டு. எனக்கு இந்த இரண்டு தகுதியும் இல்லாததால் முதல் வகுப்பு வசதி கிடைக்கவில்லை. -

இதைக் கேள்விப்பட்ட முதுகுளத்தூர் பார்வர்டு பிளாக் சட்ட மன்றக்கட்சி உறுப்பினர் சசிவர்ணத்தேவர் அவர்கள் இராம நாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபாகரிடம் என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறர். உடனே அவர் சிறைச்சாலையில் முதல் வகுப்புத் தருவது கைதிகளின் வெளியுலக வாழ்க்கைத் தரத்தையொட்டியது' என்பதால் என்னை ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எடுத்துக் கொண்டு எனக்கு முதல்வகுப்பு வசதியைச் செய்து கொடுக்க ஆணை பிறப்பித்தார். . ஒரு இளைஞனுடைய வாழ்க்கையில் முதலிரவு எப்படி மறக்க முடியாததோ அதைப்போல ஒரு இளைஞனுடைய வாழ்க்கையில் முதல் சிறைவாசமும் மறக்கமுடியாதது. எவ்வளவுதான் ஒய்வு சிறையில் கிடைத்தாலும், உடல்தான் சிறைகுள்ளே இருக்குமே தவிர மன்ம் சிறைக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டிருக்கும். ... " " - - o

٠٠ s۰غ؟:'تي.