பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். முத்து அவர். களோடு பி. எஸ். மணியம், பி. திருஞானம், மைனர் மோசஸ் எழுகடல் இராமநாதன் முதலானேர் வந்தார்கள்.
முத்துவைப் பார்த்ததும் எனக்கு ஒரு புத்துணர்ச்சி பூத்தது.
அன்று மாலை ராஜாங்கம் என்னை ஆஸ்பத்திரியில் சந்தித்தார். -
"சார் இன்றுதான் எனக்கு தைரியம் வந்தது' என்ருர்,
"ஏன் ஏதாவது டானிக் சாப்பிட்டீர்களா?' என்றேன்.
"முத்துவைப் பார்த்தபிற்கு எனக்கு தெம்பு வந்துவிட்டது'!
என்ருர்,
அப்போது நான் அதை ஆச்சரியத்துடன் கேட்கவில்லை. திரு. முத்து அவர்களின் பேச்சு ஒரு வீரக்குரல்; அவரது நடவடிக்கைகள் அலெக்ஸாண்டரின் செய்கைகளுக்கு ஈடானவை என்று ஏற்கெனவே நான் ஏற்றுக்கொண்டவை. -
20-3-65
எனக்குக் காதுவலி வந்திருந்தது. பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் பெரிய டாக்டரிடம் கா ன் பி க் க வேண்டுமென்று எண்ணினேன். சிறை அதிகாரி அனுமதியளித்தார்.
காலை 9 மணிக்கு நான் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போனேன் காது, கண், தொண்டை முதலிய கோளாறுகளுக்கு ஸ்பெஷ லிஸ்ட்டாக இருப்பவர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மருமகன்-காமேசுவரன் அவர் பெயர். நோயாளிகளிடம் அன்புடன் பேசி ஆதரவு காட்டுவதில் காமேசுவரனுக்கு இணையானவர் அவர்தான். --- - -
அன்று மருத்துவமனைக்கு பி.எஸ். மணியம், தா. கிருஷ்ணின் மு. தர்மன், ஏழுகடல் இராமனுதன், திருஞானம் மற்றும் ஏராளமான நண்பர்கள் வந்திருந்தார்கள். நண்பர் மணியம்,
அறிஞர் அண்ணு அவர்கள் 25-3-65 ம் தேதி உங்களைப் பார்க்க மதுரை வருகிருர்; அதன்பின்னர் பாளையங்கோட் டைக்குப் போகிருர் கலைஞரைப் பார்ப்பதற்காக! இண்டர் வியூவுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்' என்ருர். அண்ணு வின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். இந்தத் தகவலை நண்பர் ராஜாங்கத்திடமும் சொல்லியிருந்தேன். 25 - 3 - 65
காலை 11 மணியளவில் அறிஞர் அண்ணு அவர்களும், மதுரைமுத்து அவர்களும் சிறைவாயிலுக்கு வந்து விட்டதாக
57.