பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'என்ன டாக்டர், நான்தான அகப்பட்டேன்; அதுவும் எனக்குப் பாம்பா கடிக்க வேண்டும்' என்றேன்.

“உங்களைச் சொன்னுல்தான் டாக்டர் துடிப்பார்; உங்களைச் சொல்லாவிட்டால் சிறையில் இவ்வளவு பரபரப்பு, சூப்ரெண்டெண்ட் வரை போகுமா?’ என்ருர் டாக்டர்.

5-4-65

அறிஞர் அண்ணு அவர்கள் மதுரை மாவட்டச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். முதல் நாள் மதுரை கூட்டத்தை முடித்துக்கொண்டார். சிறையில் கம்பிக்கு வெளியே நின்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதால் திரு. N.W. நடராஜன், ப. உ. சண்முகம், மதுரைமுத்து முதலாைேரை அனுப்பி எங்களைச் சந்திக்கச்செய்திருந்தார். நான் முதன்முதல் கேட்டது இண்டர்வியூ விவகாரம் பற்றித்தான்.

'சிறை ஐ.ஜியை நாவலர் சந்தித்துக் கூறியிருக்கிருர். விரைவில் முதலமைச்சரையும் சந்திக்க இருக்கிருர்’ என்ருர் N. V. நடராஜன். அது எனக்கு ஆறுதலாக இரு ந் த து. இன்னுெரு இனிய தகவலை அவர் என்னிடம் தெரிவித்தார். அண்ணு அவர்கள் இன்று திருக்கோட்டியூர் போய் உங்களது குழந்தையைப் பார்க்கப் போகிருர்கள் என்ருர். எனக்கு உச்சி குளிர்ந்தது. இதற்குமேல் இனிய தகவல்வேறு என்ன வேண்டும்.

7- 4 - 65

மாலை 5 மணியளவில் இலட்சிய நடிகர் திரு. எஸ். எஸ். ஆர்., திரு. சிட்டிபாபு M. C. வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆனல் எனக்கு அனுமதியில்லை. திங்கட்கிழமைதானே நான் பார்த்தேன். . . . . • ,

திரு. எஸ். எஸ். ஆர். அவர்கள் ராஜாங்கத்தை மட்டும் பார்த்து எனது நலனை விசாரித்துப் போயிருக்கிருர். இன்று எஸ்.எஸ். ஆர். அவர்களை உள்ளே அனுமதித்துப் பார்ககச் சொன்னதாகத் தெரிந்தது. விவரம் புரியவில்லை. ஒருவேளை நடிகர் என்பதற்காக உள்ளே அனுமதித்திருக்கலாம் என்று நினைத்தேன். உண்மை மறுநாள் தெரிந்தது. பி. வகுப்புக் கைதிகளையும் கம்பிக்கு வெளியில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்றிருந்த இடைக்கால உத்தரவை அரசாங்கம் ரத்து செய்து விட்டது. அந்த உத்தரவு திரு. S.S.R. வருவதற்கு சற்றுமுன்புதான் வந்திருக்கிறது. என்மனம் மனதார நமது நாவலரை வாழ்த்தியது. சிறையில் இருந்த மற்ற பி. வகுப்புக்

60