88 பெண்
'மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே வீட்டினில் நம்மிடம் காட்டவந்தார் அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி !
என்பதும்,
கற்பு நிலைஎன்று சொல்லவந் தார் இரு
கட்சிக்கு மஃது பொதுவில்வைப்போம் வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொ டுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் !!. என்பதும் பெண்கள் உள்ளத்துக்கு எவ்வளவு ஆறுத லாக அமைகின்றன! வீழ்ந்த பெண்கள் விழிப்படைந்து வாழும் நிலை பெற்றுவிட்டதைக் காண மனத்துக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகின்றது 1 ஆகா! சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்' என்ற போதுதான் நாம் நம்மை அறி யாமலே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செல்கிருேமே !
குவளை உண்கண் குய்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்ருல் ஒண்ணுதல் முகனே.” என்ற குறுந்தொகைப் பாட்டு (167) நினைவுக்கு வருகிறது. சாதம் படைக்கவும் செய்திடுவோம்,' என்ற அந்த அடி, தாய்மையின் உணர்ச்சியில் நல்லுணவாக்கிக் கணவனுக் கும் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் படைப்பதிலன்ருே முகிழ்க்கின்றது ! - .
அந்தப் பழந்தமிழ் நாட்டு நிலையை எண்ணி எண்ணிப் பார்க்கின்ருர் பாரதியார். பிறர் மனே நோக்காத பேராண்மை அவர் கண்முன் காட்சி தருகின்றது. கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது