இவர்தான் பெரியார்
43
யில்லை. அறிவாளிகள் பலர் நுனிப்புல் மேய்ந்தார்கள். ‘நல்ல கற்பனை’ என்று இதை ஒதுக்கி விட்டார்கள்.
புதிய ஏற்பாடு எவர்களுக்கு எட்ட வேண்டுமோ, அவர்களுடைய காதுகளுக்கு எட்டத் தொடங்கியது. தனியுடைமைக் கேடுகளிலிருந்து, மக்கள் இனத்தை விடுவிக்கக் கூடிய சமதர்ம முறை பற்றி, உழைக்கும் தொழிலாளி வர்க்கம் கேள்விப்பட்டது. பல நாட்டுப் பாட்டாளிகள் கேள்விப்பட்டார்கள். எல்லோரும் இல்லாவிட்டாலும், பல பாட்டாளிகள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார்கள்.
கடலெனப் பெருகி வரும் உலக மக்களுக்குத் தனியான சமுதாயக் கடமையொன்று இருப்பதை உணரத் தலைப்பட்டார்கள். ஊதியத்திற்காகப் போராடுவது குழுக் கடமை. அவ்வளவே! அதற்கு மேற்பட்ட தனிக் கடமை பாட்டாளிகளின் தோள்களில் இருக்கிறது. அது என்ன?
பொதுச் சமுதாயம் முழுவதற்குமான நல்வாழ்வுக்காகப் போராடுதல். அப்போராட்டத்தின் முன்னணியில் நிற்க வேண்டியவர்கள் உழைக்கும் மக்களே. சமதர்மத்தைப் பெற்றெடுப்பதில், மற்றவர்களுக்கு இல்லாத பெரும் பொறுப்பு, உழைக்கும் மக்களுக்கு உண்டு. இவற்றை உணர்ந்த பாட்டாளிகளின், குடியானவர்களின் துணையோடு, பின்பற்றுதலோடு, மாமேதை லெனின் உலகப் புகழ் பெற்ற அக்டோபர் புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அது வரை, உலகம் கண்டிராத சமதர்ம ஆட்சியை— அதுவும் பாட்டாளிகளால் நடத்தப்படும் ஆட்சியை நிறுவினார். இரஷ்யப் பெருநாட்டில், பல்வேறு பக்கங்களிலும் தூண்டி விடப்பட்ட உள்நாட்டுப் போர்களையும், பதினான்கு வல்லரசுகளின் படையெடுப்புகளையும் சமாளித்து முறியடித்தார்.
பாட்டாளி ஆட்சி புல் அல்ல; சமதர்ம ஆட்சி நாணல் அல்ல; இரண்டும் காலத்தின் தேவை; உயிர்த் துடிப்பும், எல்லையற்ற வலிமையும் கொண்டவை; எதையும் வெல்லும் ஆற்றல் மிக்கவை என்று மெய்ப்பித்துக் காட்டினார் மாவீரர் லெனின்.
புரட்சியென்ற சொல்லைக் கேட்டாலே நடுங்குவோர் கோடி கோடி. அவர்களுக்கு ஒரு விளக்கம் :
உலகைக் குலுக்கிய அக்டோபர்ப் புரட்சி பத்து நாள்கள் நடந்தன. அப்பத்து நாள்களில் இரு தரப்பிலுமாக இழந்த உயிர்கள்