புரட்சி ஏட்டின் தலையங்கம்
77
‘உயர்ந்த சாதி’ என்னும் பேரால், தனிப்பட்ட உரிமைகளை அடைந்து வருவதையும் ஒழிக்க, அப்படிப்பட்ட வழிகளைப் பின்பற்ற வேண்டியதாகும். இவைகளை எல்லாம், எந்தக் காரணத்தை முன்னிட்டும் குற்றம் என்றோ, சட்ட விரோதமென்றோ சொல்லி விட முடியாது.
“ஆனால், இப்படிப்பட்ட காரியங்களால், உயர் நிலையில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அதனால், எதிர்ப்பு ஏற்படலாம். இவையும், இயற்கையேயாகும். அப்படிப்பட்ட அதிருப்திகள் எவையும் நீடித்து நிற்காது. அரை தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்து விடும். பிறகு, உலக சுக போகமே—வாழ்க்கை முறையே இப்படித்தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டு விடும். பிறகு, அதிருப்தியோ, எதிர்ப்போ, ஆன காரியங்களுக்கு இடமே இருக்காது. ஆதலால், இதற்காக எவரும் பயப்பட வேண்டியதில்லை” இப்படி நம்பிக்கையை வளர்க்க முயன்றது, ‘புரட்சி’ வார இதழ்.