பக்கம்:பெரியார்—ஒரு சகாப்தம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-


'மனச்சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ
என்னவோ' என்று எழுதியிருந்ததைக்கண்டு
மிகவும் கவலைகொண்டேன். தங்கள்-பணி,
மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில்
கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை
மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான்
அறிந்தவரையில், இத்தனை மகத்தான
வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும்
கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட்டில்.
ஆகவே, சலிப்போ. கவலையோ துளியும்
தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என்
வணக்கத்தினை திருமதி மணி அம்மையார்
அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு
வணக்கங்கள்.

நியூயார்க்,
10—10—68.

தங்கள் அன்புள்ள,
அண்ணாதுரை