இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவின் வழியே அறவழி யாகும்
ஆலயம் தொழுவது சாலவும் தீது
இறைவன் என்பது இயற்கையே யாகும்
ஈசன் என்பவன் நீசனே யாவான்
உன்னிலும் உயர்ந்தவன் ஒருவனும் இல்லை
ஊழ்வினை என்பது உன்னை ஏய்க்கவே
எல்லாம் உன் செயல் என்பதை நீ அறி
ஏழை என்பவன் கோழையே ஆவான்
ஒதுங்கி நில் என்றால் ஒட்டி நீ நிற்பாய்
ஓதுவோரெல்லாம் உயர்ந்தோர் ஆகார்