பக்கம்:பெரிய இடத்துச் செய்தி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மானியைப் பார்த்தபோது வீட்டு வேலைக்காரிக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டாளே ஒழிய சிரிக்கவில்லை அந்தப் பேதைப் பெண். சீமாட்டிகள் வேலை செய்வதைப் பார்க்கப் பார்க்கச் சற்று பெருமையாகக்கூட இருந்தது அவளுக்கு. ஒருவாரு சமையலை முடித்து விட்டு இரு சீமாட்டி களும் பேசிக் கொண்டே குடித்தனர். என்றும் இல்லாத அளவு அன்று சற்று அதிகமாகவேத்தான் குடித்தார்கள். ஆசிரியர் இல்லாத வகுப்பு-ஆள்வோன் இல்லாத அலு வலகம் போல அந்த வீடு அன்று என்றுமில்லாத கல.கலப்போடு காட்சியளித்தது - இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் தனித்து இருக்கும் போதுதான் அவரவர்கள் உள்ளக் குறையைப் பேசுவது வழக்கம். அதிலும் அவர்கள் வாலிபர்களானால் சொல்லவே வேண்டியதில்லை. காதலைப் பற்றிய ஆய்வுரைகள் தான் அவர்கள் பேச்சின் தலைப்பாக இருக்கும். அதிலும் அவர்கள் மதுவருகந்தி விட்டிருப்பார்களானால், அம்மம்மா அவர்கள் பேச்சே ஒரு தனியான வகை தான். உணவை முடித்துச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே சிறுவர்கள் கீஞ்சுவைப் பொருளைச் சிறிது சிறிதாகச் சுவைப்பதைப் போல சிகரெட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள் அந்த இரு சீமாட்டிகளும். இளமை தவழும் இதழ்கள் சொற்களைச் சிந்திக் கொண்டிருந்தன. உண்மையில் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது. அவ்வளவு வெறியேறி இருந்தனர். மது வெறி அவர்கள் உணர்வை கண்முகத் தாண்டிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த நாற்காலியின் முதுகின்மேல் கடைத் தெடுத்த தந்தம் போன்ற கால்களை உயரத் தாக்கி நீட்டிக் கொண்டே இன்பமான பொழுது போக்க