பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 11 தாகக் கண்ணம்மாள் கருதினாள். கண்ணம்மாவின் அணைப்பு வீரனுக்கு ஆனந்தமாகத்தா னிருந்தது. ஆனந்தமாகத்தானிருந்தது. ஆனால், அவன் ஆண்ட வர்க்கமல்லவா? சுவைக்காத தைச் சுவைத்தான்; கிடைக்காதது கிடைத்தது; முடி யாதது முடிந்தது; எஜமானியின் ஆசைக்குரியவன் தான்! வீரனுக்கும் கண்ணம்மாவுக்கும் இருந்த தொடர்பு வரவர தாட்சண்யமாக மாறிற்று. உறியில் தாவும்போது பயப்படாத பூனை உறியை அடைந்ததும் பயப்பட்டதுபோல - சுவரைத் துளைத்தபோது அஞ்சாத திருடன் வீட்டில் நுழைந்தவுடன் அஞ்சுவதுபோல- வீரன் கண்ணம்மாவின் கட்டில் அகப்பட்ட பிறகு நடுங்கினான் ஊருக்காக! உலகநாதர் வீட்டு விஷயம் ஊரில் பரவிற்று. ஊர் தூற்றுமோ? எஜமான் அறிந் தால் என்ன ஆகுமோ? என்ற கேள்விகள் வீரனைத் திக்கு முக்காட வைத்தன. ற வண்டியுடன் மாடுகளுண்டு. வண்டிக்காரன் வீர னுண்டு,என்ற நிலை ஏற்பட்டது பின்னால்! கண்ணம்மா வைக் கண்டாலே முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விடுவான். முகாந்திரம் தெரியாமல் கண்ணம்மா விழித் தாள். கடிதம் எழுதலாம் என நினைத்தாள்! நினைப்பு இருந்தது, நேரமிருந்தது, தாள் இருந்தது, பேனா இருந் தது, ஆனால், வீரனுக்குக் கல்வி வாடை இல்லையே! கண்ணம்மா கலங்கிய உள்ளத்துடனே காலத்தைக் கடத்தினாள். வீரனின் ஊடல் தீரும் வரை உலகநாத ரிடம் உல்லாச நாடகத்தின் ஒத்திகைகளை நடத்தி வந்தாள். ந அப்போதுதான் ஒருநாள்! உலகநாதர் - கண்ணம்மா ஊஞ்சல் ஆட்டம் நடைபெற்றது. கண்ணம்மா கிளறிக் கிளறிக் கேட்ட பிறகு உலகநாதர் வாயைத் திறந்தார்.