பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரிய இடத்துப் பெண் வீட்டு அண்ணிக்கு வேலைக்காரி ஒருத்தி வேண்டுமாம். "கல்யாணம் ஆகிற வரையிலே உன் மகளை இங்கே விட்டு வையேன்" என்றார். நான் அப்போதுதான் தடுமாறினேன். "அவள் குழந்தைங்கோ. தனியா இங்கே இருக்க பயப்படுவாளே" என்று பல்லைக் காட்டி னேன். உன் மகளைக் காட்டிலா கொண்டு வந்து விடப் போகிறாய்! அட பைத்தியக்கார மனுஷா?" என்று ஏளனம் செய்தார் உலகநாதர். எனக்கு என்ன சொல்வ தென்றே புரியவில்லை. "எப்போதும் இங்கேதான் இருக்கணுமா?" என்று ஒரு கேள்வியைப் போட்டு வைத்தேன். "அட ஒரு இரண்டு மூணு மாசத்துக்கு இருக்கட்டுமே. என்ன உன் பெண் தேய்ந்தா போய் விடுகிறாள்! கண்ணம்மாவோடு இருந்து பழகினால் குடும்ப விஷயமும் புரியும், வேறு ஒரு புருஷன் வீட்டு டுக்குப் போனாலும் நல்ல குடித்தனக்காரியென்று பெய ரெடுப்பாள்" என்று பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். என்னால் மறுக்கவே முடியவில்லை; மறுக்கத் தைரியமும் இல்லை. மறுத்திருந்தால் மறுநாளே அவருடைய கடனை அடைத்தாக வேண்டும். நான் 500 ரூபாய்க்கு அப் பொழுது எங்கு போவேன். இந்தப் பாழுந் தெய்வங்கள் என்னை அப்படியா வைத்திருந்தன? அவைகளுக்குத் தான் என்னைப் பற்றிக் கவலையே கிடையாதே! "உன் மகள் குமுதத்துக்கு மாசம் 20 ரூபாய் சம்ப ளம் கொடுக்கிறேன். கவலைப்படாதே. அவளுக்கு இங்கு ஒரு கஷ்டமும் இருக்காது. கண்ணம்மாவோடு குஷாலா இருக்கலாம். வேலையும் அதிகமில்லை" என்று மறுபடி யும் உலகநாதர் உபந்யாசத்தை ஆரம்பித்தார். கிராமத் திலே பணத்தைக் கண்டால் பகவானைக் கண்டது