பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெரிய இடத்துப் பெண் ரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்பதை அவன் எப்படி அறிவான். பாவம்! எப்படியோ காரியம் கைகூடிற்று. என் கணவர் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். வாசலில் கை கட்டி நிற்கும் வண்டிக்காரனுக்கு ரயிலுக்கு வண்டி கொண்டு போகும் வேலை மட்டுந்தானா? என்னை வட்ட மிடும் வேலையும் வந்து சேர்ந்தது. உலகநாதர் ஊரிலே! நானும் வீரனும் உல்லாசபுரியிலே! அவர் காட்டிலோ மேட்டிலோ அலைவார். அதைப் பற்றிக் கவலையில்லை நாங்கள் கட்டிலிலே! வீரனுக்கு முதலில் என்னைத் தீண்டுவதற்குப் பயம்! தீண்டிய பிற்பாடு அய்யா பார்த்துவிடுவாரோ என்ற அச்சம்! சங்கதி பரவிவிடுமோ என்ற சந்தேகம்! கடைசியில் அவர் எப்பொழுது வெளியூர் செல்வார் என்ற ஏக்கம்! இந்த நிலைமையில் எங்கள் காதல் வளர்ந் தது. மாதங்கள் ஒன்று இரண்டு இப்படிப் பல மாதங் கள்! ஏன் இரண்டு மூன்று வருடங்களும் ஆகிவிட்டன. இதில் இன்னொரு பயங்கரமும் நடந்துவிட்டது. நானும் வீரனும் சேர்ந்து கொலையும் செய்துவிட்டோம். என் வயிற்றில் வளர்ந்த இரண்டரை மாதச் சிசுவை யம லோகத்திற்கு அனுப்பினோம். அதற்கு வீரன்தான் மருந்து வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தான். பிறக்கும் குழந்தை வீரனைப்போல் இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமே கொலைக்குக் காரணம். இப் பொழுது நீங்கள் சொல்லுங்கள் கண்ணம்மா ஒரு கொலைகாரி என்று. அதைப்பற்றி எனக்குக் கவலை