பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பெரிய இடத்துப் பெண் லேயே எப்படி இருப்பார் என்று நான் சொல்லவும் வேண்டுமா! அவர் இப்படி ஒரேயடியாக மாறிவிட்ட தற்கு எனக்குக் காரணம் புரியவில்லை. ஒருவேளை வீரனுக்கும் எனக்கும் உள்ள "இரகசியம்" அம்பலமாகி விட்டதோ என்று நடுக்கமுற்றேன். அல்லது வேறு ஏதாவது புதுவித வியாதியோ என்று ஐயமுற்றேன். நான் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு பக்கம் வீரனில்லா வாழ்வு! இன்னொரு பக்கம் உலகநாதர் பற்றிய ஆராய்ச்சி! இரண்டிற்கும் நடுவில் நின்று தவித் தேன். உலகநாதரிடம் எவ்வளளோ கேட்டுப் பார்த் தேன். அவர் மௌனமே சாதித்தார். . ஒரு நாள் இரவு 9 மணிக்கு இருக்கும். உலகநாதர் எங்கேயோ போய்விட்டு வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். நானும் அவர் அருகில் அமர்ந்தேன். அவருடைய முகத்தைக் காணச் சகிக்கவில்லை. அந்த அகண்ட சச்சிதானந்த விழிகளைப் புருவத்தின் பக்கம் ஏற்றி எங்கேயோ யோசனையை ஓட்டிக்கொண் டிருந் தார். நான் நடிக்க ஆரம்பித்தேன். ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். உண்மையாக அல்ல, உலக நாதரை ஏமாற்ற உலகநாதர் என்னை வாரியெடுத்துத் தடவிக் கொடுத்தார். அந்த ஸ்பரிசத்தால் என் வலி நீங்குமென்று அவர் எண்ணியிருக்கலாம். 'வீர னிருக்க வேண்டிய இடத்தில் இந்த வீணனா' என்று என் மனம் துடித்துக்கொண்டதை அவர் எப்படி அறிவார்? மறு படியும் ஊஞ்சலில் உட்கார்ந்தோம். ஊஞ்சல் அசைந் தது; உலகநாதரும் பேச்சை ஆரம்பித்தார். (எங்கள் பண்ணையிலே தலையாரி உத்தண்டி என்று ஒரு கிழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு ஒரு