பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய இடத்துப் பெண் இந்த உலகத்திலே எத்தனையோ குமரிகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களாகவே வீணாக்கிக் கொள்கிறார் கள். எனக்கு ஏற்பட்ட நிலைமை நானாகத் தேடிக் கொண்டதல்ல. கூ வீரன் என் அத்தை மகன். அத்தான் படிக்காத ஆள். ஆனால், என் வாழ்க்கைத் துணைவராக இருப்ப தற்கு லாயக்குள்ளவர். அவரோடு ஆனந்தமாகக் காலத்தைக் கடத்தலாம் என்று நம்பினேன். நான் நினைத்ததிலே தவறில்லை. நம்பியதுதான் முட்டாள் தனமாகிவிட்டது.என் தகப்பனார் என்னை வீரனுக்கு மணமுடிப்பதாகக் கூறிய பின்னரே நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். அதுவரை என் சிந்தனையில் எந்த துர் எண்ணங்களும் இடம் பெறவில்லை. அத்தா னுடைய அழகுகளைப் பற்றி நான் கூறவே தேவை யில்லை. அவருக்கு நான் அடிமையாகி விட்டேன் என் றால், அந்த ஒரு வார்த்தை போதாதா? அத்தான் என்மேல் வைத்த ஆசை மாறக்கூடாதே என்பதற்கு வேண்டுமானால் நான் என்னைச் சிங்காரித்துக் கொள்வ துண்டு. வைர ஜோடிப்புகளா எனக்கு இருந்தது? கொல்லையில் கிடைக்கும் முல்லையும், தோட்டத்துத் தாழம்பூவுமே எனக்கு ஆபரணங்கள். கண்ணாடி வளையல்களைத்தான் என் கைகள் அறியும். எப்படியோ நானும் அத்தானும் ஒன்றுபட்டு விட்டோம். அவர் என்னை உண்மையாகவே காதலித் தார். அவருக்குக் காதல் என்றால் இன்னதென்று தெரியுமோ தெரியாதோ! என்னை அடிமையாக்கிக் கொள்ள மட்டும் அவரிடம் ஒரு சக்தி இருந்தது. சதா