பக்கம்:பெரிய இடத்துப் பெண்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 66 பெரிய இடத்துப் பெண் ஜோதி நிரந்தரமாக நின்று எரிந்துகொண் டிருந்தது. அது என்ன வீரா?" என்று கேட்டேன். "குமுதா வின் பிணம் சுடுகாட்டில் எரிகிறது" என்று அலட்சிய மாக அவன் பதில் சொன்னான். குமுதாவிடத்தில் அவ னுக்கு எவ்வளவு அன்பு இருந்தது! நான்தான் அவ னுக்கு மோட்ச சாம்ராஜ்யமாகி விட்டேனே! பாவம்! கு அத்தானுக்காகச் சுமந்துகொண் டிருந்த உடல் அழுக்குப்பட்டு விட்டது. அதைத் தீயில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் குமுதா. குமுதா உலகத்திலிருந்து மட்டுமல்ல; அவள் நம்பியிருந்த அத்தானின் இதயத்தி லிருந்தும் பிரிந்துவிட்டாள். பரிதாபத்திற்குரிய சிறுமி! எங்கள் வண்டி 'கடகட'வென் ரயில் நிலையத்தை நோக்கி ஓடிற்று; குமுதா எரிந்துகொண் டிருந்த இடத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டது ஒரு நரியின் பயங்கரமான ஊளை சோகத்தின் உச்ச ஸ்தாயியை எட்டிற்று. இந்த உலகத்தில் குழுதா வுக்காக அந்த ஒரு ஜீவன் தான் அப்பொழுது அழுத்து போலும்! குமுதா கிடக்கிறாள்; இனி எங்களைப் பற்றிக் கேளுங்கள். நாங்கள் ஏறிய ரயில் கல்கத்தாவை நோக்கிக் கிளம்பிற்று. எங்கள் கல்கத்தா வாழ்வைப்பற்றி ஒரு வார்த்தை! பக்தர்கள், சுத்த மூடர்கள்; இந்திர லோகத்தைக் காண எங்கேயோ போகவேண்டு மென்கிறார்களே, அசடுகள்! வந்து பார்க்கட்டும், கல்கத்தாவிலே எங்கள் வீடு இந்திர லோகமா யிருப்பதை! நான் இந்திராணி! வீரன் இந்திரன்! ரதியும் மன்மதனும் பாடங் கற்றுக் கொள்ள எங்களிடம் வரவேண்டும், தெரியுமா? ஸ்ருமகள் அச்சகம், செனன-1