காப்பிய காலம்வரை சிவன் 89 参 哆组 兹姆参多彰粤 旁 s 哆翠哆哆哆 象 ● 盛磁 联 锣 影 8 必 8 8 始 曲 始 ä 腺 姆 蜘 岁 歌 冷 锣 曙 姆 银 邸曾 8 得 罗< 8 8 8 哆姆 蜘 姆 钟 够 昭 罗 邸 影 娜
- * * * * * * so sa a a s * * * * * * g sa e s
வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய் வரிவளைக்கை வாளேந்தி மாமயிடன் செற்று சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கனிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய் கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரி, அரன், பூமேலோன் அகமலர் மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்' இங்குக் காட்டப் பெற்றுள்ள மேற்கோள்கள் ஒரு பெரிய உண்மையை அறிவிக்கின்றன. இளங்கோவடிகள் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது இன்று அனைவரும் ஏற்கும் ஒன்றாகும். அப்படியானால் சங்கப் பாடல்களிலும், சங்க காலத் திலும் காணப்படாத ஒரு புது வளர்ச்சி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் புகுந்து பரவிவிட்டிருக்கிறது என்பதையே மேலே காட்டிய பாடல்கள் அறிவிக்கின்றன. உமையொரு பாகன் கருத்து வளர்ச்சி சங்க காலத்தில் சிவபெருமான் நன்கு அறியப்பட்டிருப்பினும் உமைபற்றிய பேச்சுக்கு அதிக இடமில்லை. உமை இறைவனின் ஒரு பாகத்துக்குரியவள் என்பதைக் கடவுள் வாழ்த்துப் பகுதிகளி லிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 'பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்' என்று புறமும், 'நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்' ' என்று ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தும் கூறுகின்றன. இவை இரண்டையும் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவராவார்.