பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தேவார காலத்துக்கு முந்தைய சிவன் களப்பிரர் பற்றிய குறிப்புகள் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் பின்னர் இத் தமிழகத்தில் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் ஒர் இருண்ட காலம் பரவி இருந்தது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அக்கால எல்லை யில் தமிழர் அல்லாத, தமிழ்ப் பண்பு, நாகரிகம், சமயம் மொழி என்பவற்றை ஏற்காத, போற்றாத களப்பிரர் என்ற ஒர் இனத்தார் இத் தமிழ்நாட்டில் வந்து தங்கித் தம் செல்வாக்கை நிலை நாட்ட முயன்றனர் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். களப்பிரர் என்று கூறப்பெறும் இவர்களைப்பற்றி உறுதியான வரலாறு எழுத வாய்ப்பளிக்கும் சான்றுகள் அதிகம் கிடைத்தில. பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 'பாண்டி நாட்டில் களப்பிரரும், வாழ்க்கை இலக்கியம் என்பவற்றில் அவர்கள் தாக்கமும்' என்ற ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். களப்பிரர் பற்றி ஆய்ந்து அதன் தொடர்பான ஒரு சுருங்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதியுள்ளவர் பேராசிரியர் அருணாசலமாவார். இவருக்கு முன்னர்க் களப்பிரர் பற்றி எழுதியவர்கள் டாக்டர் கே.பி. அறவாணன், டாக்டர் பி.ஜி.எல். சாமி ஆகிய இருவருமாவர். ஆனால் அவர்கள் ஆய்வு செம்மையாக இல்லை என்பதைப் பேராசிரியர் தம் நூலில் தெளிவுபடுத்துகிறார். (பக்கம் 20.) பேராசிரியர் அருணாசலனாரின் நூல் பற்றிய ஆய்வு பேராசிரியர் அருணாசலம் கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. வேள்விக் குடி அறமுறி (Grant) நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-780) என்பவ னால் வழங்கப் பெற்றது. தளவாய்ப்புரம் செப்பேடுகள் முதலாம் வரகுணனின் 45வது ஆட்சியாண்டில் கி.பி. 908இல் வழங்கப் பெற்றன. இவற்றின் உதவி கொண்டு களப்பிரர் வரலாற்றைத் தொகுக்க முயன்றுள்ளார் ஆசிரியர். எருமை நாடு எனப்படும் மைசூர்ப் பக்கத்தில் இருந்து புறப்பட்ட களப்