1 18 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஆனால் கோவையாக இத்தனை கருத்துக்களை முதன் முதலில் கூறியவர் இப்பெரியவரேயாவார். சம்பந்தருக்கு முன்னோடி அம்மையாரே ஆவார் இதனை அடுத்து, வழிபடவேண்டிய முறைகளையும் அம்மையார் தெரிவிக்கின்றார். 'தழல் கொண்ட சோதிச் செம்மேனி எம் மானைக் கைம் மாமலர்தூய்த் தொழக் கண்டு நிற்கிற்குமோ துன்னி நம் அடும் தொல்வினையே ' 'அன்பால் அடைவது எவ்வாறு கொல்' 'பிரான் என்று தன்னைப் பன்னாள் பர வித் தொழுவார் இடர்கண்டு இரான் என்ன நிற்கின்ற ஈசன் கண்டீர் 'தமக்கு என்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒரு நாள் எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாம்............ 多 4让 39 4{} இப்பாடல் பகுதிகள் ஏழாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த தேவாரப் பனுவல்களின் முன்னோடியாக அப்படியே பிரதிபலிப் பதைக்காண முடிகின்றனவல்லவா? இறைவனை, எங்கோ வாக்கு மனம் செல்லாத இடத்தில் இருப்பவனாகக் கூறிக் கொண்டிருந்த, நிலைபோக நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்பவனாய், ஒவ் வொரு வருக்கும் தனித்தனியே அருள் புரிவபவனாய்க் (Personal God) காணும் நிலைதான் இத் தமிழ் நாட்டுப் பக்தி மார்க்கத்தின் உயிர் நாடியாகும். மூவர் முதலிகள் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து இத் தமிழகத்தில் கொணரப்ப்ோகும் புதிய பக்தி வழிச் சைவ சமயத்துக்குக் கடைகால் இட்டவர் காரைக்கால் அம்மை யாராவார். இத்தமிழர் கூறிய பக்தி வழி வேதக்காரர்களும் உபநிடதக்காரர்களும், வடவர்களும் காணாத ஒன்று ன்ன்பதை யும், இது தமிழகத்திலிருந்து தோன்றி வடக்கே பரவிற்று என்றும் ஆர்.என். தாண்டேகர் 'இந்து சமயம்-உள்நோக்கு' என்ற தம் நூலில் கூறுகிறார். பத்ம புராணத்தில் பக்தி என்பது திராவிட நாட்டில் தோன்றி அங்கிருந்து மராட்டிய நாடு சென்று, இறுதியாக மத்ரா எனப்படும் வட மதுரைப் பகுதியை அடைந்தது என்றுங் கூறப்படுகிறது." சமயம் மூவர் முதலிக்ள் காலத்தில்முழு வளர்ச்சி பெறுகிறது என்றால் அவர்கட்குப் பாட்டியார் முறையான காரைக்கால் அம்மையார் காலத்திலேயே அது கால்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/146
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
