I 26 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வடபகுதியை ஆட்சி செய்த பல்லவர்கள் தமிழரல்லாதவர் கள். ஆனால் களப்பிரரைப் போல அனைவரும் சைன சமயத் தைச் சேர்ந்தவர்களல்லர். ஒரு சிலர்(மகேந்திர வர்மன்)சமண ராகவும் பலர் சைவராகவும், வைணவராகவும் இருந்ததாகத் தெரிகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டிலும், கி.பி. ஏழாம் நூற்றாண்டி லும் தென்னாட்டிலும் ஆந்திரப் பகுதியிலும் பெளத்த சங்கரா மங்கள் இருந்தன என்று முறையே பாஹியானும், ஹவான் சுவாங்கும் குறித்துள்ளனர். ஆனால் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வந்த ஹுவான் சுவாங் என்பவர் தமிழ் நாட்டில் பல சங்கங்கள் இருந்தனவெனினும் பல பாழ்பட்டிருந்தன என்றும் குறிக்கிறார். காஞ்சியைச் சுற்றித் திகம்பர சைனர் இருக்கை கி.பி. 6,7ஆம் நூற்றாண்டுகளில் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சி, தன்பால் உள்ள கற்றவர்கள் காரணமாக உலகப் புகழ் எய்தி நின்றது. புத்த சமய நூலாகிய நியாய பாடியம் எழுதிய வாத்சாயனர், திக்க நாகர், தருமபாலர், தரும கீர்த்தி என்போர் தமிழர்களேயாவர். பல்லவர் ஆட்சி வருமுன்பே தமிழகத்தில் புத்த சமயம் நன்கு வளர்ந்திருந்ததென அறிகிறோம். ஹவான் சுவாங் குறிப்புக்களிலிருந்தே காஞ்சியிலும் அதனைச்சுற்றியும் திகம்பர சைனர் பலர் இருந்தனர் என்பதை அறிய முடிகிறது. பல்லவர் காஞ்சியில் வருவதற்கு முன்னர்ச் சோழர் ஆட்சியில் இப்பகுதி இருந்ததென்று தெரிகிறது. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் இங்கிருந்த இராஜ விகாரம் என்னும் புத்த சைத்தியத்தை இளங்கிள்ளி என்பவன் கட்டினான் என மணிமேகலை கூறுதல் காணலாம். புத்த சமயம் இவ்வளவு வலுவாக இங்கு நிலைத்திருந்தும், இங்குள்ள தமிழ்ப் பெளத்தர் கள் வடநாடு சென்று பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகும் சிறப்புப் பெற்றிருந்தும், ஸென் புத்திலம் என்று கூறப்பெறும் தியான புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் (கி.பி. 527) போதி தருமன் என்ற தமிழராக இருந்தும், திருஞானசம்பந்தர் காலத் தில் பெளத்தர் சிறகொடிந்த பறவையாக ஆனது ஏன் என்பது பற்றி ஆராய வேண்டும். பெளத்தர்களும் சமணர்களும் ஏறத்தாழ ஒரே காலத்தில் தான் தமிழ்நாடு புகுந்துள்ளனர் எனினும் சமணம் பெற்ற செல் வாக்கைப் பெளத்தம் பெறாமற்போனது வியப்பேயாகும்! இதில் ஒரு வேடிக்கையும் இருக்கிறது. எல்லையில்லாமல் அறிவின் அடிப்படையில் வாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டனர்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
