பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 பெரியபுராணம் - ஓர் ஆய்வு பொட்டும் இட்டுக்கொண்டு மக்களிடை உலவியதை நினைக்கும் பொழுது சமணர்கள் நல்ல மனத்தத்துவம் தெரிந்தவர்களாகவே இருந்துள்ளனர் என நினையவேண்டியுள்ளது. இன்னும் ஒரு நுணுக் கத்தையும் அறிய முற்படுதல் நலம் பயக்கும். ஒருவர் புதிய சமயத்தில் சேர்ந்து சில நாட்கள் கழித்து அப் புதிய சமயத்தை விட்டுவிட்டுப் பழைய சமயத்துக்குத் திரும்பினால் அவர்கள் கொடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டி இருந்தது. மக்களை அச்சுறுத்துவதன் மூலமாகப் பலரும் பழைய சமயத் துக்குத் திரும்பிவிடாமல் பாதுகாக்க இந்த வழி மேற்கொள்ளப் பெற்றது. இன்னும் ஒரு நுணுக்கமும் உண்டு. மதம் மாறித் திரும்பப் பழைய மதம் செல்பவர்களைத் தண்டிப்பவர்கள் யார் தெரியுமா? மத் மாற்றம் செய்வித்த மதத் தலைவர்கள் இக்காரியத் தில் ஈடுபடுவதில்லை. அதற்குப் பதிலாக உள்ளூர்க்காரர்களைக் கொண்டே இதனைச் செய்வித்தனர். வந்தேறிகள் தண்டனை வழங்கினால் உள்ளூர்க்காரர்கள் வெறுப்படையவும் ஒன்று சேர வும், புரட்சிக் கொடி தூக்கவும் தயாராகிவிடுவர். எனவே உள்ளூர்க்காரர்களை, அதுவும் தம் சமயத்தில் புதிதாகச் சேர்ந்து அதில் உயர் பதவி வகிக்கின்றவர்களைக்கொண்டோ அன்றி சூட்சிக்காரர்களைக் கொண்டோ தண்டனை வழங்கினர். இம்முறை பண்டைய சமணர்கள், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்குப் புகுந்த கிறிஸ்தவர்கள், யாழ்ப்பாணத்தில் புகுந்த கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவரும் கையாண்ட ஒர் உத்தியேயாகும். சமணர்கள் பிறரைக் கொண்டு தண்டனை வழங்கும் பொழுது தங்கள் அஹிம்ஸா தர்மத்தைக் காத்துக் கொண்டதாகவும் நடைபெறும் செயலுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதாகவும் மக்களை நம்பும்படி சய்தனர். அதிகார வர்க்கத்தை மாற்றும் வித்தையில் வல்லவர்கள் ஆகையால்தான் மகேந்திர பல்லவன், பாண்டியன் நெடுமாறன் மேட்டுக்குடியில் பிறந்த மருள்நீக்கியார் போன்றவர்களைத் தம் சமயத்தில் சேருமாறு செய்தனர். ஏழாம் நூற்றாண்டில் இங்குப் பரப்பப் பெற்ற சமயம் திகம்பர சம்ணமாகும். இதற்கு இரு நூற்றாண்டின் முன்னர் சிம்ம சூரி, ஸர்வ நந்தி என்பவர் கள் வடமொழி, பிராக்ருதம் என்பவற்றில் பெரும் புலமை பெற்று விளங்கினர், புறச் சமயத்தவர்கள் என்று கூறப்பெறும் பெளத்தர், சமணர் என்பவர்கள் இந்நாட்டில் இருந்த நிலையும் அவர்கள் செல்வாக்கின் ஆழமும் இத்தகையன என்பதை அறிகிறோம்.