மூவர் காலப் பின்னணி I 3 5 'மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்க புகை போய் அந்தர விசும்பனவி அற்புதம் எனப்படரும்..." என்றல்லவா ஞானசம்பந்தர் பாடுகிறார். செந்தமிழர், தெய்வ மறை நாவர், செழுங்கலை தெரிந்தவர்கள், அந்தமில் குணத் தவர்கள் என்ற இந்த நான்கு தொகுப்பினுள் அனைவரையும் அடக்கிவிட முடியும். அப்படியானால் இவர்கள் யாவரும் அர்ச்சனைகள் செய்கிறார்கள் என்றால், தர்மே நேரில் நின்று சிவாச்சாரியின் உதவி இல்லாமல் அர்ச்சனை புரிகின்றார்கள் என்றுதானே பொருள் கொள்ளவேண்டியுளது. நான்கு வகை யானவர்களைப் பிள்ளையார் குறிப்பிட்டிருப்பினும் இவர்கள் அனைவரும் இந் நாட்டினராகிய தமிழர்களேயாவர் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியானால் நான்காகப் பிரிவினை செய்யக் காரணம் யாதாக இருக்கும்? எனச் சிந்திப்பதில் தவறு இல்லை. செந்தமிழர் என்பார் தமிழ் மட்டும் அறிந்தவர்கள். தெய்வமறை நாவர் என்பார் தமிழராகப் பிறந்தாலும் வேதியர் ஆகையால் தெய்வமறை பயின்றவர்கள். செழுங்கலை தெரிந்த வர்கள் என்பார் தமிழ்ப் புலமையோ, வேதப் பயிற்சியோ இல்லாமல் நல்ல கலை வல்லுநர்களாவர். அந்தமில் குணத்தவர் என்பார் இத் தொகுப்பு எதனுள்ளும் சேராமல் நல்லொழுக்கம் பண்பாடு என்பவற்றை உடைய துறவிகளாகலாம்.இந்த நான்கு கூட்டத்தாரும் அர்ச்சனை செய்கிறார்கள் என்று கூறுவதால் சிவவேதியர் தாம் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற வரம்பு ஞானசம்பந்தர் காலத்து இல்லையோ என ஐயுற வேண்டியுள்ளது. மூவர் முதலிகள் ஆகமத்தை ஒரளவு குறிப்பிட்டுச் செல் கின்றனர் என்பதையும் அறிய முடிகிறது.ஆகமம் என்பதைத் தந்திரம் என்ற பெயராலும் அந்நாளில் வழங்கியுள்ளனர் என அறிகிறோம். 'தொகுத்தவன் அருமறை, அங்கம், ஆகமம்' 'ஆகமச் செல்வனாரை...' 'மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி எனத் திருஞானசம்பந்தரும், ' 'பனையில் ஆகமம் சொல்லும் தன பாங்கிக்கேடி மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி. எனத் திருநாவுக்கரசரும், ' 'அண்டனை அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும்' 'அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் எனச் சுந்தரரும்' பாடிச் செல்லுதலைக் காணலாம்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/163
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
