பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 36 - பெரியபுராணம் - ஓர் ஆய்வு இவற்றை நோக்குமிடத்து இப் பெரியார்களின் காலத் திலேயே ஆகமம் நன்கு பரவியிருத்தல் வேண்டும் என நினைய வேண்டியுள்ளது. அன்றியும் ஆகமம் என்பவை தந்திரம் என்ற பெயரினும் வழங்கப்பெற்றன போலும். 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் வந்த திருமூலர் தந்திரம், ஆகமம் என்பவைபற்றிப் பல இடங்களிற் பேசுவதுடன் - நூற்றுக்கணக்கான ஆகமங்கள் உள்ளன என்றும் இவை இறைவனால் அருளப் பெற்றவை என்றும் கூறுகிறார். இன்று வழங்கும் பல சிவாகமங்கள் இவர்கள் கூறும் தொகுப்பினுள் அடங்குமா என்பதும் தெரியவில்லை. இன்றுள்ள பல ஆகமங்களிலும் அர்ச்சனை பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மூவர் முதலிகளும் சிறப்பாகப் பிள்ளையாரும் அர்ச்சனை பற்றிப் பலவிடங்களில் பாடிச் செல்கிறார்கள். மற்றொரு குறிப்பும் இங்குக் காண்டல் வேண்டும். அர்ச்சனை என்பது ஆகமம் கூறாத ஒன்று. தனி மனிதர் இறைவன் புகழ் பாடி மலர் கொண்டு அவனை அர்ச்சித்தலே அதுவாகும். ஆகமம் ஏற்காத ஒன்றைத் திருஞானசம்பந்தர் இவ்வளவு விரிவாகக் கூறுவராயின் அவர் காலத்தே ஆகமங் களின் செல்வாக்கு மிகுதியாக இல்லை என்றுதான் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறுவதால் ஆகமங்கள் 7ஆம் நூற்றாண்டின் பிறகுதான் தோன்றின என்று கூறுவதாக நினைய வேண்டா. மிகப் பழைய காலந் தொட்டே ஆகமங்கள் இருந்து வருகின்றன. ஏழாம் நூற்றாண்டுக்குச் சற்று முன்னர் தமிழகத்தில் வேத வழக்கின்செல்வாக்கு அதிகமாகி வேதம் கூறாத கோயில் களிலும் அச் செல்வாக்கு மிகுந்த காலத்தில் அதை முறியடிக்கவே ஆகமங்கள் அதிகமாகப் பயிலப்பட்டன போலும். பல்லவர் காலத்தில் இருந்த இந்தப் பின்னணியில்தான் திருஞானசம்பந்தர் தேவாரத்தைக் காண்டல் வேண்டும். பெரிய புராண ஆராய்ச்சிக்கு இத்துணை முன்னுரையும் திருஞான சம்பந்தர் பற்றிய விளக்கமும் தேவையா? என ஒரு சிலராவது வினவலாம். அது பற்றியும் சற்றுச் சிந்திக்கவேண்டும். சேக்கிழார் பெரிய புராணத்தை ஏன் பாடினார்? சேக்கிழார் புராணம் என்ற பெயரில் யாரோ ஒருவர் தம் கருத்தை எல்லாம் கூறி அதனைக் கொற்றவன் குடி உமாபதி சிவம் இயற்றினார் என்ற பெரிய பொய்யையும் துணிந்து எழுதிவிட்டார். உமாபதி சிவத்தின் பெயரை இழுப்பது பெருந்தவறு என்பதைப் பல காரணங்கள், வரலாற்றுச் சான்றுகள் காட்டி வன்மையாக மறுத்தும் கண்டித்தும் உள்ளார் டாக்டர் இராசமாணிக்கனார்