1 58 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்றும் வருணனே உயர்ந்தவன் என்றும் கூறப்படும் நிலை பலவும் உண்டு. இவற்றில் ஈடுபடும் மறையவர்கட்குச் சிந்தை மயக்குறும் ஐயம் வந்ததில் வியப்பில்லை அல்லவா. இதனைப் போக்கப் பின்ளையார் கையாண்ட வழி எளிதானது. இந்திரன், வருணன் முதலிய சாதாரணத் தேவர் களைத் தலைவர்கள் என்று முந்தையோர் பிறழ உணர்ந்தமை யினால்தானே சிந்தை மயக்குறும் ஐயம் வந்தது. எனவே மூல முதற் பொருள் இவர்கள் அல்லர் என்றும் இவர்களைப் பற்றிச் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் மூல மந்திரங்கள் அல்ல என்றும் கூறிய பிள்ளையார், இவர்கள் அனைவருக்கும் மூலமாவான் சிவபெருமானே என்றும் இவர்கள்பற்றிச் பேசும் மந்திரங்கட்கும் மூலமாய் அமைந்தவை ஐந்தெழுத்தே என்றும் தெளிவித்தார். மேலும் வேதவழக்கொடுபட்டவர்கள் மாலைக் காலத்தில் இறுக்கும் கடனில் எல்லாத் தேவர்களையும் அழைத்து மந்திரஞ் சொல்லி வழிபடுவது மரபு. பிள்ளையார் அதனையே பற்றிக்கொண்டு 'மறையவர்களே! நீங்கள் அந்திக் காலத்தில் உச்சரிக்கும் பல்வேறு மந்திரங்கட்கும் மூலமாக இருப்பது ஐந்தெழுத்தேயாகும். எனவே அவற்றை ஒதுவதற்குப் பதிலாக நீவிர் ஐந்தெழுத்தை ஒதினால் அனைத்துப் பயனையும் அடைந்து விடமுடியும் என்று உபதேசித்தார் என ஆசிரியர் கூறுகிறார். இந்த அடிப்படையில் நின்று கண்டால் ஓர் உண்மை நன்கு விளங்கும். இரண்டாம் அதிகாரத்தில் கூறப்பெற்றபடி வேத ஸம்ஹிதைகள் ருத்ர சிவனை நன்கு அறிந்து கொள்ளாமல் இந்திரன், வருணன் முதலானவர்களைப் போற்றின. நாளா வட்டத்தில் பிராமணங்கள், ஆரண்யகங்கள் தோன்றி வளர்ந்தன. உபநிடதங்கள் தோன்றிய நிலையில்தான் மூலப் பொருளைப் பற்றிப் பேசின. பிரமம் என்ற பெயரை வைத்து உபநிடதங்கள் எந்தப் பொருளைப் பூரணம் இதம், பூரணம் அதஹற்’ என்று போற்றினவோ அந்தப் பொருள்தான் சிவபெருமான் என்று அந்த உபநிடதங்களுள் ஒன்றாகிய ஸ்வேதாஸ்வதர உபநிடதமும், ருத்ரம் என்ற பெயரால் தைத்ரீய ஸம்ஹிதையும் போற்றினவோ அந்தப் பொருளின் வடிவமாகவும் மந்திரமாகவும் இருப்பது ஐந்தெழுத்தே எனப் பிள்ளையார் கூறி அவர்களுடைய ஐயத்தைப் போக்கினார் என்கிறார் சேக்கிழார். சேக்கிழார் இவ்வளவு விரிவாக இப் புதுப் புரட்சிக் கருத்தைப் பாட இடம் தந்தவை பிள்ளையாரின் பாடல்களேயாகும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/186
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
