I 6 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று பாடுகிறார், பெருந்துயரத்தில் ஆழ்ந்தவர்கள் தம் உறுதியை இழந்துவிடுதல் உலக அனுபவம்; இதனை அறிந்த பெருமான், எத்துணைத் துன்பத்திலும் துயரத்திலும் ஒருவனைக் காக்கும் துணை ஐந்தெழுத்தே என்கிறார். இறுதியாக, வேதங் காணாத ஐந்தெழுத்தின் பெருமையை யார் கூறுகிறார்கள் தெரியுமா? என்ற வினாவை எதிர்பார்த்துப் பிள்ளையார் விடை கூறுகின்றார். இந்த முடிவான ஒன்றைச் சொல்லத் தமக்கு உரிமையும் தகுதியும் உண்டு என்பதை, 'நற்றமிழ் ஞானசம்பந்தன், நான்மறை கற்றவன், காழியர் மன்னன், உன்னிய அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து உற்றன. வல்லவர் உம்பர் ஆவரே " என்ற பாடல் மூலம் ஐயத்திற்கு இடமின்றிப் பேசுகிறார் அப் பெருமகனார். கிருஷ்ண யஜுர் வேத தைத்திரீய ஸம்ஹிைைதயில் நாலாவது காண்டத்தில் ஐந்தாவது பிரபாடகமாக உள்ள பூரீ ருத்ரம் * என்று கூறப்படும் பகுதியில் போகிற போக்கில் 'நம: சிவாயச சிவத ராயச ' என்று காணப்படும் மந்திரத்தைப் பிரித்து எடுத்துத் தாம் வளர்க்கும் சைவத்தின் உயிர் நாடியாகச் செய்தவரும் அதற்குப் புதிய பொருளைக் கூறியவரும் இந்த மந்திரத்தைச் சுற்றி வருமாறு வேதம், உபநிடதம், அங்கங்கள் ஆகியவற்றைச் செய்தவருமாகிய ஒருவரைப் புரட்சி வீரர் என்று கூறாமல் வேறு யாரைக் கூறுவது? அத்தியயனத்திற்கும் ஐந்தெழுத்தை ஒதுவதற்கும் உள்ள வேறுபாடு மூன்றாவது திருமுறையில் 22ஆவது பதிகத்தில் ஐந்தெழுத்து என்று மட்டுங் கூறி அதன் பெருமையைப் பலபடக் கூறிய பெரியார் அதே திருமுறையின் 49 ஆவது பதிகத்தில் அந்த மந்திரம் யாது என்பதை யாவருக்கும் விளங்குமாறு கூறுகிறார். அன்றியும் வேதத்தில் வரும் மந்திரங்களை அப்படியே ஒப்பிப்பது போல இதனை ஒப்பிப்பதால் பயனில்லை என்ற, புத்தம் புதிய புரட்சிகர மான கருத்தையும் இங்குதான் வெளியிடுகிறார். இந்த மந்திரங் களை ஒதும் போது அன்புடனும் பக்தியுடனும் ஒதவேண்டுமென்று வேதம் எங்கும் குறிப்பிடவில்லை. மந்திரங்களைச் சொல்லி அவற்றுடன் சில கிரியைகளைச் செய்யுமாறு வேதம் கூறிற்றே
- பிற்சேர்க்கையில் விளக்கம் காண்க.