பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் கூறும் சைவம் 1 6 1 தவிர ஒருமைப்பாட்டுடன் அம் மந்திரங்களைக் கூற வேண்டும் என்று எங்கும் விதிக்கவில்லை. இவ்வாறு அத்யயனம் செய்வதால் அந்த மந்திர ஒலிக்கு உள்ள பயனை ஒரு வேளை பெறமுடியுமே தவிர, வேறு ஒன்றும் பெறமுடியாது. வேத மந்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு பயனைக் கருதியே சொல்லப்படுகின்றன. அந்த ஒலியின் வன்மையால் ஒருவேளை அந்தப் பயனை அடைந் தாலும் அடையலாம். ஆனால் ஐந்தெழுத்தைப் பொறுத்தவரை இம்முறை பொருந்தாது. எனவே வேத வழக்கொடு மாறு பட்டு, பெரியார் அதிலும் புதுமுறை ஒன்றைக் கையாள்கிறார். ஐந்தெழுத்தை உருவேற்றினால் பயன் இல்லை, அதன் மறுதலையாக அதனிடத்து அன்பு கொண்டு, கண்ணிர் ஊற்றெடுக்க ஓத வேண்டும். ஒதுதல் வேறு; உருவேற்றல் வேறு. ஒதுதலில் மனம் ஒடுங்கி, உள்ளம் ஒரு நிலைப்பட்டுப் பொறி புலன்கள் அடங்கி இருக்கும். இதனை விளக்க வந்த பெரியார், 'காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமைநன் னெறிக்கு உய்ப்பது வேத நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே " என்று கூறுவதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இரண்டு புதிய கருத்துக்களைப் பிள்ளையார் இப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். பின் இரண்டு அடிகளில் கூறப் பெற்றதன் புதுமையை, புரட்சியை, என்ன காரணத்தாலோ தமிழுலகம் சிந்திக்க மறந்துவிட்து. வேதம் என்பன தாமே தோன்றியவை; அவற்றின் மேம்பட்டவை எதுவும் இல்லை, என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த இந்த நாட்டில், 'வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஒன்று உண்டு என்கிற கருத்தை முதன் முதலில் பரவவிட்டவர் புரட்சிப் பிள்ளையாராவார். அதுவரை யாரும் கூறாத கருத்து இது. வேதத்தை எதிர்த்துப் போராடிய பெளத்தரும், சமணரும் அவை உண்மையானவை அல்ல என்றும், அதனால் அவை நம்புவதற்கோ ஏற்றுக் கொள் வதற்கோ தகுந்தவை அல்ல என்றும் கூறி ஒரேடியாக ஒதுக்கி விட்டனர். முழுவதுமாக வேதத்தை ஒதுக்கி விட்டமையின் வேத விரோதிகள் என்று கூறி வைதிக சமயத்தாரும் அவர்களை ஒதுக்கிவிட்டனர். வேதத்தை ஏற்காத இவர்களை விட்டால், அதனை ஏற்கின்ற அனைவரும், அவர்கள் வைதிகர், சைவர்,