16 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஆணவம் மனிதனை என்றும் கீழே தள்ளும் கருவியாகும். ஆணவ்த்தின் வடிவாய இராவணன்கூட இறைவன் கயிலை மலையை எடுத்துப் பின் துன்புற்றுத் தன் பிழைக்கிரங்கி ஐந்தெழுத்தை, ஒதித்தான் பிழைத்தான் என்ற கருத்தையும் பிள்ளையார்' பாடலில் குறிப்பது மக்கட்கு நம்பிக்கை தருவ தாக அமைந்தது. மேலும் நாவரசரும், 'நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயுவே 3.3 'நற்றுனையாவது நமச்சிவாயவே 'நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே ' 'நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே ' 'நல்அக விளக்கது நமச்சிவாயவே ' நன்னெறியாவது நமச்சிவாயவே ' படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சும் என் நாவிற் கொண்டேன்..... ' 最 என்ற வகையில் பாடியருளினார். இவர்கள் இருவரையும் அடுத்து வந்த திருநாவலுரரும், 'நற்றவா உனை நான்மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே....... 40 'அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி "' என்று இதன் பெருமையைக் கூறினார். மேலே காட்டப்பெற்ற மேற்கோள்கள் ஐந்தெழுத்தைப் பற்றி மூவர் முதலிகள் கூறியவற்றில் ஒரு பகுதியேயாகும். இவற்றிலிருந்து ஒன்றை அறிந்து கொள்வது எளிது. வைதிக மார்க்கத்திலிருந்து பிரித்து, இப் பெருமக்கள் தமிழகத்தில் நிறுவிய சைவ சமயத்திற்குக் கடைகாலாக அமைந்தவை, அந்த வேதத்தில் காணப்பட்ட ஸம்ஹிதைகள் அல்ல. திருவைந் தெழுத்து என்ற அஸ்திவாரத்தின்மேல் இவர்கள் பக்தி மார்க்க சைவம் என்ற கோட்டையை எழுப்பினர். தங்களுடைய அஸ்திவாரம் மிகவும் பலமுடையது; எதையும் தாங்கவல்லது என்பதைப் பல பாடல்கள் மூலம் நிறுவினர். பிள்ளையார் செய்த புரட்சியின்முடிவில் ஐந்தெழுத்து. அன்பு என்ற இரண்டே இன்றியமையாதவை ஆக்கினார். அடுத்து அப்புரட்சி வீரராம் திருஞானசம்பந்தர் தம்முடைய புதிய சமயம் திருவைந்தெழுத்தாகிய கடைகாலில் எழுப்பப்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/194
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
