சேக்கிழார் கண்ட சைவம் 1 9 7
- * - - - - - - சந்தனக் காப்புத் தேடி கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை
செய்வான் வெற்றி கொண்ட வேந்தன் இங்குள்ளவர்களின் சமய வாழ்கையில் குறுக்கிட்டதாலும், மூர்த்தியார் என்ற தனி மனிதருடைய சமய வாழ்க்கை முறைக்குக் கேடு சூழந்தாலும் 'வன்மைக்கொடும்பாதகன், 'கற்புரை நெஞ்சுடை வஞ்சகன்’ ’’ என்றும் கவிஞர் ஏசுகிறார். அரசன் மக்களுடைய சமய வாழ்வில் தலையிடுவதையும் அதற்குக் கேடு சூழ்வதையும் இவர் விரும்ப வில்லை என்பதை அறியமுடிகிறது. தமிழரல்லாத கூற்றுவனார் என்ற சிற்றரசர் தம் முயற்சி யால் போர்கள் பல செய்து, சோழ மன்னனையே தோற்கடிக்கும் திறம் பெற்றிருந்தனர். என்றாலும் போர் முறையில் சோழ நாட்டை வென்ற களப்பிரரைக் குறைகூறச் சேக்கிழார் மனம் விருப்பப்படவில்லை. 'அருளின் வலியால்அரசொதுங்க அவனி எல்லாம் அடிப்படுப்பார் பொருளின் முடிவுங் காண்பரிய வகையால் பொலிவித் திகல்சிறக்க மருளுங் களிறு பாய்புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார் வெருளுங் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலானார்' " வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பலமுருக்கி சென்று தும்பைத் துறைமுடித்துச் செருவில் வாகைத் திறங் கெழுமி மன்றல் மாலை மிலைந்தவர் தம் வளநா டெல்லாங் கவர்ந்துமுடி ஒன்றும் ஒழிய அரசர்திரு வெல்லாம் உடையா ராயினார். ' என்று கூறுவதைக் காணும்பொழுது இக் கவிஞர்பிரானுடைய சைவ, தமிழ்ப் பற்றுக்கள் அரச நீதி நடைபெறுவதில் குறுக்கிடு வதை விரும்பவில்லை என்று தெரிகிறது. இவருடைய முழு அன்புக்கும் உரியவரான திருஞான சம்பந்தர் புராணத்தில் இவருடைய மனநிலையை விரிவாகக் காண முடிகின்றது. அந்தப் புராணத்தில் வருகின்ற மன்னன் கூன்