சேக்கிழாரின் படைப்பாற்றல் 2 15 மணிக்கும் தொல்காப்பியம்தான் இலக்கணம்; சிவஞான போதத் துக்கும் தொல்காப்பியந்தான் இலக்கணம் என்று கூறுவது ஓரளவு அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. இங்ங்ணம் கூறுபவர்கள் தொல்காப்பியனாருக்குப் பிறகு இம்மொழி வளர்ச்சியே பெற வில்லை என்று நினைப்பதாகத் தெரிகிறது. அதே போலத்தான் தண்டியின் காப்பிய இலக்கணத்துள் தமிழ்க் காப்பியங்களை நுழைத்துப் பார்ப்பதும். 'தண்டி கூறிய நூற்பொருள் இல்லை என்பதால் பெரியபுராணம் பெருங்காப்பிய மன்று ' என்று கூறும் மாயையிலிருந்து விடுபட்டுத் தனி மனிதனைப் பற்றியோ, ஒரு சமுதாயத்தைப் பற்றியோ, ஒரு பண்பைப் பற்றியோ கூடக் காப்பியம் அமையலாம் என்பதை அறிதல் நலம். தனி மனித வரலாற்றைக் காப்பியமாகப் பாடாதது ஏன்? மேலும் தனி மனித வரலாற்றை அறிபவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் அத் தனி மனிதரின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து 'இவர்களைப் போல நாமும் ஆதல் முடியாத காரியம்; செயற்கருஞ் செயல் செய்த இவர்கள் எங்கே? செயற்குரியன கூடச் செய்ய முடியாத நாம் எங்கே?' என்று பார்த்து மனங் கலங்கி விடுவர். அத் தனி மனிதரின் வாழ்க்கையைப்போலத் தாமும் வாழ்தல் இயலாத காரியம் என்று அம் முயற்சியிற் கூட ஈடுபட முனையமாட்டார்கள். மனித மனத் தத்துவத்தை நன்கறிந் திருந்த சேக்கிழாருக்கு இது நன்கு விளங்கி இருக்கும். எனவே எல்லா மக்களையும் தன் கருத்துக்கு ஈர்க்க வேண்டுமானால் அதற்கு வழி யாது? 'தன்னேர் இல்லாத ஒரு தலைவனை' மட்டும் பெற்றுள்ள காப்பியம் இதற்குப் பயன்படாது. அத்தகைய காப்பியம் காப்பியப் புலவனின் புலமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழுமே தவிரச் சமுதாயத்துக்குப் பயன்பட இயலாது. அனைவரையும் ஈர்க்க உள்ள ஒரு வழி உண்டு. தங்களைப் போலவே வாழ்ந்த சாதாரணமக்கள் வாழ்வில் அவர்கள் ஒன்றி ஈடுபட முடியும். அந்தச் சாதாரண மனிதரிடம் ஏதாவது ஒரு செயல் ஒப்பற்றதாக இருப்பின் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளும்பொழுது அந்த ஒப்பற்ற செயலையும் உடன் ஏற்றுக் கொள்வர். ஒரு வண்ணார், ஒரு குயவர், ஒரு வணிகர், ஒரு நெசவாளி, ஒர் இல்லத்தரசியார், ஒரு வலைஞர், ஒரு போர் வீரர், சந்தனம் அரைத்துக் கொடுக்கும் தொழில் புரிபவர் ஒருவர் என்று இம்மாதிரியான சாதாரண மக்கள் வாழ்க்கை, நாமும் ஏன் அதுபோலச் செய்யக் கூடாது? என்ற பிறரை நினைக்கத் தூண்டும் வாழ்க்கைகளாகும். சிலப்பதிகாரம் போலக் குடிமக்கள் 16
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/243
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
