பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு காப்பியம் ஆக ஒன்றை இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் இன்ப வேட்டையில் இறங்கியுள்ள தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியும் என்று கருதி இருந்த சேக்கிழாருக்குத் திருத்தொண்டத் தொகை வரப்பிரசாதம்போல் கிடைத்தது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட வரலாறுகள் ஒரு தொகுப்பாகக் கிடைத்ததாக அறியக்கூடவில்லை. சேக்கிழார் தமது அலுவல் முறையில் தமிழகம் எங்கும் சுற்றிப் பார்த்தபொழுது இம் மக்களுக்கு உறுதி பயப்பதோர் வழி வகுக்கவேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும். எந்த நிலையி லும் அத் தமிழர் கவிதையிலும் காப்பியத்திலும் ஈடுபடுவதைக் கண்டிருக்கவேண்டும். எனவே இவர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் அதற்குரிய வழி ஒரு காப்பியம் அமைப்பதேயாம் என்ற முடிவுக்கு வந்த பிறகு, காப்பியக் கதையைத் தேட முயன்றிருக்க வேண்டும். அவருக்கு முன்னர் இருந்த காப்பியங்கள் அனைத்தும் அவருடைய கவனத்திற்கு வந்திருக்கலாம். எல்லாக் காப்பிங்களும் இலக்கியச் சுவை நிரம்பியனவாய் இருந்தன என்பது உண்மைதான். அவற்றைக் கற்பவர்களும் அந்த இலக்கியச் சுவைக்காகவே அவற்றைப் பயின்றுவிட்டு அத்துடன் விட்டுவிட்டனர். தன்னேரில்லாத அக் காப்பியத் தலைவர்கள் மக்கள் மதிப்புக்கும் வியப்புக்கும் ஆளாயினரே தவிர, அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழி காட்டுபவர்களாக அமையவில்லை. சாதாரண மனிதன் ஒருவன் இராமன் மணிமேகலை, சீவகன் என்பவர்களைப் போல வாழவேண்டும் என்று நினைப்பதும் முடியாத காரியம். அவர் குறிக்கோளை நிறைவேற்றத் திருத்தொண்டத் தொகை உதவிற்று இத்தகைய நிலையில்தான் சேக்கிழாருக்குச் சாதாரண மனிதர்களின் வரலாறு கூறும் திருத்தொண்டத் தொகை தேடிப் போனது கையிற் கிடைத்தது போலாயிற்று. இக் கத்ைகளைக் கண்டு அதன் பின்னர் அவர் காப்பியம் இயற்றத் துணியவில்லை. காப்பியஞ் செய்ய முடிவு செய்து அதற்கேற்ற கதையைத் தேடிய பொழுது அவர் கருத்துக்கு ஏற்றதாக இக் கதைகள் அமைந்து இருத்தலின் இவற்றையே பாட எடுத்துக்கொண்டார். இம் முறையில் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு இந்த வரலாறுகளைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தபின் அவை கட்டுக்கதைகள் அல்ல; வரலாறுகள் என்பதால், தாம்