பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஊராகப் போகவேண்டிய தேவை இல்லை. எனவே மக்களைக் கண்டு அவர்களுடன் பழகித் தாங்கள் வாழும் முறையை மக்கள் காணுமாறு செய்தால் சைவநீ தழைக்கும் என்பதை அறிந்தே இவர்கள் ஊர் ஊராகச் சென்றனர் என்பதைக் கவிஞர் உணர் கிறார். உடனே அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். சமுதாய நலமே, முன்னேற்றமே தம் குறிக்கோள் என்பது தெளிவாயிற்று. அப்படியானால் அச் சமுதாய முன்னேற்றத்துக்குத் தாம் செய்யும் தொண்டு இந்த உதிரி வரலாறுகளை ஒரு காப்பிய வடிவுடன் அமைப்பதேயாகும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதன் பிறகுதான் உதிரிக் கதைகளை எவ்வாறு காப்பியமாக் குவது? என்ற வினா தோன்றிற்று. இக் கதைகளையும் விட முடியாது; காப்பிய அமைப்பையும் விடமுடியாது; அந்த நிலை யில்தான் பண்புப் பொருள் ஒன்றைக் காப்பியத் தலைமையாக ஆக்கிவிட்டால் இந்த இக்கட்டில் இருந்து விடுபடலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார். அடியார்கள் வரலாறுகள் அனைத் தையும் ஒரு முறை கண்ணோட்டம் விட்டால் கிடைக்கின்ற பொதுவான திரண்ட கருத்து யாது? அவர்கள் தொண்டுள்ளம், அதன் பயனாகப் பிறந்த செயல்கள், நிகழ்ச்சிகள் என்பவையே நினைவுக்கு வருகின்றன. அப்படியானால் தொண்டு என்ற பண்பை, குணத்தைக் காப்பியத் தலைமையாக ஆக்கிவிட்டால் என்ன? ஆக்க முடியாதா? பண்பை விவரிக்கும் முகமாக இப் பண்பைப் பெற்ற பண்பிகளை விவரிக்கலாம் அல்லவா? இம் முடிவு வலுப்பெற்றவுடன் தொண்டு என்னும் பண்பு என்ன மாதிரி இருக்கும் என்பதை விரிவாக வருணிக்கப்புகுந்தார். இப் பண்பினைப் பெற்ற பண்பிகளாகிய தொண்டாகளைப் பற்றி விரிவாகக் கூற ஒரு தலைப்பைத் தேடினார். திருக்கூட்டம் என்ற தலைப்புப் பொருத்தமாக அமைந்தது. ஒன்றாகக் கூடினால் அது வெறுங்கூட்டம். ஆனால் ஒரே கருத்தும் கொள்கையும் குறிக்கோளும் உடையவர்கள் ஒன்று கூடினால் அவர்கட்குப் பெயர் திருக்கூட்டம் என்பதாகும். எனவே தொண்டு என்னும் பண்பைப் பெற்ற பண்பிகளைப் பற்றிக் கூறும் பகுதிக்குத் திருக்கூட்டச் சிறப்பு என்று தலைப்புக் கொடுத்தார். வேறு எந்த ஒரு காப்பியத்திலும் அல்லது நூலிலும் காண முடியாத ஒரு பகுதியாகும் திருக்கூட்டச் சிறப்பு என்பது. சாதாரணக் காப்பியம் என்றால் என்ன என்பதை மட்டும் அறிந்தவர்கள் இந்தத் தலைப்பையும் அதன் விரிவையும் கண்டால் காப்பியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு? இது ஏன்? இங்கு இடம் பெற்றது? என்றுதான் கேட்கவேண்டி வரும். தனித் தனியாக அடியார்கள் வரலாறு கூறப் புகுந்தவர் இப்படித்