226 பெரியபுராணம்- ஓர் ஆய்வு அடியார்களை வீரர் என்று கூறியது ஏன்? 'வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை; யாண்டு அஃது ஒப்பதில் என்று கூறின திருக்குறளுக்கு முழு இலக்கியமாய், அமைந்த இவர்களின் வேண்டாமைக்கு எல்லை வகுத்துக் காட்டுகிறார் கவிஞர். "கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார்' " உலகிடை வாழும் எல்லா உயிர்களும் முடிவாக விரும்பவேண்டி யதும் அடைய முயலவேண்டியதுமான ஒன்று உண்டு என்றால் அதுவே வீடுபேறாகும் என்றுதான் இதுவரை அனைத்து நூல் களும் கூறிச் சென்றுள்ளன. ஏன்? எல்லாச் சமயத்தாரும் கூறுவதும் அதைத்தான். கடவுள் என்ற பொருளை ஏற்றுக் கொள்ளாத சமண, பெளத்தர்களும் 'நிர்வாணம்' எனப்படும் இந்த விடுதலையே வேண்டும் என்றே விழைவர். எனவே உலகிடை எங்கு வாழ்வோரும், எந்தச் சமயத்தைச் சேர்ந் தோரும், நிரீஸ்வரவாதிகளுங்கூட விரும்பும் விடுதலையைக்கூட இத் தொண்டர்கள் வேண்டா என்று ஒதுக்கி விடுகிறார்களாம். வீட்டின்பத்தை ஏன் வேண்டாம் என்று கூறுகிறீர்கள்? இந்த உலகத்திலேயே இறைவனை வணங்க முடிகிறது. அவனுடைய கோயில்களாகிய மக்களுக்குத் தொண்டு செய்யமுடிகிறது. அவர்கள் துயரத்தைப் போக்கி இன்பம் அடையச் செய்யமுடி கிறது. இவற்றைவிட அவர்கள் வேண்டுவது வேறு எதுவும் இல்லையே! வீட்டுலகம் சென்றால் இறைவனை எப்பொழுதும் காணலாம், வணங்கலாம். ஆனால் யாருடைய துயரத்தைப் போக்கமுடியும்? யாருக்குக் கைத்தொண்டு செய்யமுடியும்? இவை இரண்டையும் செய்வதனால் ஏற்படும் இன்பம் கிட்டாதே! தொண்டர்கள் தொண்டு செய்வதில்தானே தலையாய இன்பத் தைக் காணமுடியும்? அந்தத் தொண்டு செய்வதற்கு இடம் இல்லாத வீடுபேற்றை வேண்டா என்று கூறும் இவர்களை வீரர் கள் என்று கூறாமல் பிறகு யாரை வீரர் என்று கூறுவது. இந்த முறையில் தொண்டு என்ற பண்பு சிலரிடம் புகுந்து அப் பண்பை ஏற்ற பண்பிகளாக மாற்றிய பிறகு அப் பண்பிகள் என்ன பொதுவான இயல்புடையவர்கள் என்பதற்குச் சில அளவுகோல் களை நிறுவுவதன் மூலம் தம் காப்பியத்திற்குக் கடைகால் இட்டு விட்டார் சேக்கிழார்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/254
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
