232 பெரியபுராணம் ஒர் ஆய்வு விடைக்கும் பெரிதும் வேற்றுமை உண்டு. இரண்டாம் நிலையில் (அனுபவத்துக்குப் பின்) இந்த வாழ்க்கையின் குறிக்கோளே முற்றிலும் மாறிவிடும். இக் குறிக்கோள் மாறிவிட்ட ஒருவர் அந்த வினாடிவரை இந்த உலகத்தையும், தம்மையும் பார்த்துக் கொண்டிருந்த பார்வையும் மாறிவிடும். உலகத்துக்கும், அதில் வாழும் உயிர்கட்கும் தமக்கும் உள்ள தொடர்பையே வேறு பார்வையில் நோக்கத் தொடங்கிவிடுகிறார். சமய அனுபவம் கைவரப் பெற்றவருடைய பார்வை, குறிக்கோள் என்பவை மாறி விட்டமையின் அவருடைய நினைவுகள், சிந்தனைகள், பேச்சுக் கள், செயல்கள், நடைமுறைகள் ஆகிய அனைத்தும் பழைய நிலை யிலிருந்து முற்றிலும் மாறி விடுகின்றன. அவருடைய உணர்ச்சி கள், உணர்வுகள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் (Values) பழக்க வழக்கங்கள், பிறரிடம் நடந்து கொள்ளும் முறைகள் ஆகிய அனைத்துங்கூட மாறிவடும். இந்த அனுபவம், அதனைப் பெற்றவரின் முழு மாற்றத் துக்குக் காரணமாய் அமைந்து விடுதலின் அதன் பரிமாணமும் விரிவடைந்துவிடுகிறது. எனவே மனவியல் அடிப்படையில் பார்த்தால் சமய அனுபவம் என்பது சிக்கல் நிறைந்த ஒன்றாகும். இந்த அனுபவம் கிடைத்த அடியார்களின் நம்பிக்கைகள் முதலான அனைத்தையும் பட்டியல் போட்டுப் பார்த்தாலும் அவர்கள் பெற்ற அனுபவத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட அப் பட்டியல் வெளியிட்டதாகாது. இவர்கள் அனுபவத்திற்குப் பிறகு இவர்கள் நம்பிக்கைகள், செயல்முறைகள், நடைமுறைகள் என்பவற்றில் புறத்தே இருந்து காணும் நாம் பூரணமாக அறிய முடியாவிடினும் ஒரு தொடர்பு இருப்பதைக் காணமுடியும். அறிவின் துணை கொண்டு இன்று வளர்ந்துள்ள மனவியலின் வீச்சுக்கு அப்பாற் பட்டும் இவர்கள் அனுபவம் விரிந்து செல்வதால் இன்றுள்ள மனவியலார் வகைப்படுத்தும் முறைகளுள் இந்த அடியார்களின் வாழ்க்கை நடைமுறை, செயல்கள் என்பவற்றை அடக்கிவிட முடியாது. காரணம் இந்த அனுபவம் முழுத்தன்மை பெற்றதாய்க் கூறுபடாததாய், வீரியம் நிறைந்ததாய் இருத்தலின் இந்த அடியார்களின் வாழ்க்கை முழுவதையும் மாற்றும் வன்மை படைத்ததாக இருக்கிறது. திருநாவுக்கரசருடைய வாழ்க்கையே இதற்கு எடுத்துக் காட்டாகும். பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் சமய அனுபவத்தில் திளைத்தவர்கள் சூலை நோய் மூலம் இவருக்குச் சமய அனுபவம் கிடைத்து விட்டது. அது கிடைத்த பிறகு உல்கம் முழுவதும் வேறு காட்சி
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/260
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
