அடியார்கள் யார்? 23.3 நல்கியது. அவருடைய பார்வையில் அச்சம் என்பது அறவே ஒழிந்து விட்டது. 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்ற துணிவு பிறந்தது. சுண்ணாம்புக் காளவாயும், தாமரை மலர்ந்த பொய்கையும் ஒன்றாகவே காட்சி அளித்தன. இதனை அறியும் பொழுதே மற்றொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். சமய அனுபவம் என்று கூறியவுடன் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவமே கிடைத்திருக்கும் என்று முடிவுகட்டுவதும் சரியன்று. சைவம், வைணவம், பெளத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம் முதலிய எல்லாச் சமயங்களிலும் சமய அனுபவம் பெற்ற பெரியோர்கள், அடியார்கள் உளர். ஆனால் ஒரே சமயத்தைச் சேர்ந்த பலரிடங்கூட ஒரே மாதிரியான அனுபவம் கிடைப்பதில்லை. திருஞானமசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் என்ற மூவரும் தேவாரம் பாடியவர்கள்தாம். சமய அனுபவமும் இறைவன் அருளும் பெற்றவர்தாம். என்றாலும் இவர்கள் மூவர் அனுபவமும் ஒரே மாதிரியானவை என்று கூறுவது பொருந் தாது. இந்த அனுபவத்தின் வேறுபாடுகளில் உயர்வு, தாழ்வு என்பது கடுகளவும் இல்லை. இந்த அனுபவங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்பதை உணர்ந்த நம் முன்னோர் ஓரளவுக் காவது இவற்றைப் பாகுபடுத்த முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சியின் பயனாகத் தோன்றியதுதான் நான்கு வகையான மார்க்கங்கள். நால்வரும் நான்கு வகையான வழிகளைப் பின்பற்றினரென்று கண்டு, அவற்றிற்கு சத்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன் மார்க்கம் என்று பெயர் தந்தனர். இந்தப் பெயர்கள் இவர்கள் அனுபவ வேறு பாட்டைத் தெரிவிக்கப் பயன்படுமே தவிர, இந்தப் பெயர்ப் பொருளை வைத்துக் கொண்டு நால்வரின் அனுபவத்தை ஆயப்புகுவது சரியன்று. கார்டன் ஆல்போர்ட் என்பவர் சமய அனுபவம் பெற்றவர்கள்பற்றிக் கூறுவதை அறிதல் நலம். 'அகநிலை அடிப்படையில் ஒரு சமயவாதியின் மனப்பான்மை அல்லது நடக்கை, முக்கியமான, முக்கியமில்லாத எல்லாப் பகுதிகளிலும் சாதாரண ஒரு மனிதனின் மனப்பான்மை, நடக்கை என்பவற்றினின்றும் பெரிதும் மாறுபட்டிருக்கும். சமய அனுபவத் தின் வேர்கள் எண்ணில் அடங்காதவை. அவை ஒவ்வொரு தனி மனிதரையும் தாக்கும் அளவுக்கேற்ப ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபட்டிருக்கும். எனவே இம் மாறுபட்ட அனுபவங்களை ஒரு தொகுப்பினுள் அடக்க முயல்வது இயலாத காரியம்.'
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/261
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
