பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார்கள் யார்? 235 கோசரியார்) அதில் இடம் பெறுகிறார். துணி வெளுக்கும் தம் தொழிலைச் செய்யும்போதே அன்பர்களுக்கு இல்வசமாகத் துணி வெளுக்கும் செயலை மேற் கொண்டவரும் (திருக்குறிப்புத் தொண்டர்) அதில் உள்ளார். மனைவியின் திருமாங்கல்யத்தை விற்றுக் குங்குலியம் வாங்கிச்சென்று கோவிலில் தூபம் போட்டு விட்டு அங்கேயே பசி மயக்கத்தில் விழுகின்றவரும் (குங்குலியக் கலையர்), அதில் உள்ளார். சமயப் போராட்டத்தில் எதிர்த்தவர் களைக் கடும் தண்டனை அடையச் செய்து அத் தண்டனை வழங்கப்படும்பொழுது வாளா இருந்துவிடும் ஒருவரும் (ஞான சம்பந்தர்), அதில் உள்ளார். அதே சமயிகள் தம்மைச் சுண்ணாம் புக் காளவாயில் போட்டும், விடத்தை உண்ணச் செய்தும், கல்லுடன் பூட்டிக் கடலில் எறிந்தும் எத்துணைக் கொடுமைகள் செய்தாலும் வாயே திறவாமல், அவர்களிடம் கடுகளவும் பகைமை பாராட்டாமல் அன்பு செய்யும் ஒருவரும் (நாவரசர்) அதில் உன்ளார். இத்தனை மாறுபட்ட வாழ்க்கைமுறை, செயல்கள், நடை முறை அத்தனையும் இருப்பினும் இவர்கள் அனைவரும் சிவனடி யார்கள், நாயன்மார்கள் என்ற நிலைமையை அடைந்துவிட்ட மையின் சமய அனுபவம் என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கே உரியது போலும் என்று நினைப்பது பெருந்தவறாகும். அது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். யார் வேண்டுமா னாலும் அதை அடையமுடியும்; ஒரே பிறவியில்கூட அடைய முடியும் என்று கூறுவதே பெரியபுராணம் தோன்றியதன் நோக்க மாகும். அப்படியானால் சாதாரண மக்களாகப் பிறந்த இவர்கள், நம்மைப் போன்ற இவர்கள், எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது? இறைவனை நம்பி அவனுடைய திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தூய மனத்துடன் சொல்வது, மக்கள் தொண்டு செய்வது, தவிர இவர்கள் யாரும் வேறு எதுவும் செய்து இந்த நிலையை அடைந்தார்கள் என்று வரலாறு கூறவில்லை. ஜபம் என்று சொல்லப்படும் தியான முறையில் இம் முன்னேற்றத்தைக் கண்டார்கள். சமய அனுபவம் கிட்டுகின்ற வரை இவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களேயாவர். தியானம், அதனை அடுத்துள்ள அபிடேகம், அர்ச்சனை, இறைவன் புகழ்பாடுதல் என்ற எளிய வழிகளையே இவர்கள் மேற்கொண்டார்கள். நம்பியாரூரர் என்ற பெயரையே தாரக மந்திரமாகக் கொண்டு அட்டமா சித்திகளையும் பெற்றார் ஒருவர். அப்படியானால் தியானம், ஜபம் என்பனவற்றிற்கு