அடியார்கள் யார்? 25 I அவரை ஒத்த மேட்டுக் குடிமக்களுக்குச் செய்யப் பெற்றனவாகும். நாவலர்க்கு வளம் பெருக நல்கியது கற்றறி மாந்தருக்குச் செய்யப் பெற்றவையாகும். நாவரசர் சமணம் புகுந்தது ஏன்? சமுதாயத்தில் வாழும் எல்லாத் தரத்தில் உள்ள மக்களுக்கும் தாம் செய்யும் அறக்கொடையின் பயன் சென்று சேரவேண்டும் என்று நினைத்துத் திட்டமிட்டு அறம் செய்தார் என்பது தெளிவாகிறது. இதன்படிப் பார்த்தால் மக்கட் கூட்டம் முழுவதிலும் அவருடைய அன்பு, கருணை என்பன சென்று பாய்ந்தது என்பதும் விளங்குகிறது. இத்தகைய ஒருவர் தாம் பிறந்த சமயத்தில் அமைதி கிட்டவில்லை; வேறு சமயஞ் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அக்காலச் சூழ்நிலையில் எச் சமயத்தை விரும்பி இருப்பார். இரண்டு பாடல்களில்" நிலை யாமை எண்ணம் வாகீசரைப் பெரிதும் ஆட்கொண்டது என்று குறிக்கிறார் கவிஞர். நிலையாமை பற்றி ஓயாமல் சிந்திக்கும் ஒர் இளைஞரை இவை இரண்டுமே தன் சமயத்திற்கு ஆதாரம் என்று பறையறைந்து கூறும் சமணம் ஆட்கொண்டதில் வியப்பில்லை. இந்த இடத்தில் ஒன்றை மறவாமல் மனங் கொள்ள வேண்டும். வாகீசர், சேக்கிழார் என்ற இருவருக்குமே சமண சமயத்திலிருந்து நலமான கொள்கைகளை ஏற்றுக் கொள்வதில் தடை ஒன்றும் இல்லை. அஹிம்சை, புறத் துறவு என்ற இரண்டுமே சைவர்கட்குச் சமணர் தந்த கொடையாகும் என்று கூறினால் மிகையாகாது. ஆனால் சமயம் வேறு சமயிகள் வேறு என்பதை மறத்தலாகாது. சமயங் கூறும் தத்துவங்கள் அனைத்தையும் சமயிகள் அனைவரும் பின்பற்றுகிறார்கள் என்று நினைப்பது பெருத்த தவறாக முடியும், இந்த நிலை உலகத்தில் தோன்றி வளர்ந்துள்ள எல்லாச் சமயங்கட்கும், சைவம் உள்படப் பொதுவான தாகும். சமயிகள் தம்முள் அடித்துக் கொள்வதும் புறச் சமயங்களை அழிக்க முயல்வதும் புதுமையானவையல்ல. சைவம், வைணவம் என்ற சமயங்களும் இப்பொது விதிக்கு விலக்கல்ல. அதிலும் எந்த ஒரு சமயமும் அரசியல் செல்வாக்கில்லாமல் வாழவோ வளரவோ முடியாது. எனவே குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்தச் சமயம் அரசியல் செல்வாக்குப் பெற்றுள்ளதோ அந்தச் சமயம் பிற சமயங்களைத் தாக்குவதும் அவற்றை அழித்துத் தன் செல்வாக்கை நிலைநாட்ட முற்படுவதும் இயல்பேயாகும்.
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/279
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
