26 0 பெரியபுராணம் ஒர் ஆய்வு 'நஞ்சுடை கண்டர் நெஞ்சு இடமாக நண்ணுவர்' 2 'நெஞ்சு புகுந் தென்னை நினைவிப்பார்’ 3 'என்பிருத்தி நரம்புதோல் புகப் பெய்திட்டு என்னை ஒர் உருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு என்னுள்ளங் கோயிலாக்கி 'காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக 5 என்று பாடிய தேவார ஆசிரியர்களை அடுத்து வந்த திருமூலரும், 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே" 'படமாடக் கோயில் பகவற்கொன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்க ஃதாமே ! என்றல்லவா கூறுகிறார்? எனவே காப்பியம் பாடவந்த சேக்கிழார் தொண்டையும் அன்பையும் இன்றியமையாத இலக்கணங்களாகக் கொண்டு அடியார் வரலாற்றைப் பேசியது புதிய ஒரு கருத்தை உலவ விட்டதாகாது. இத் தமிழகத்தின் தொல் பழஞ் சமயமாகிய சைவம் எதற்கு முக்கியத்துவங் கொடுத்ததோ அதை அறிந்து போற்றின செயலைத்தான், சேக்கிழார் திருதொண்டர் புராணத்தில் செய்கிறார். தமிழகத்தில் புகுந்த வேற்றுச் சமயங் கள் அங்கிருந்த தொல் பழஞ் சமயமாகிய சைவத்தை அமுக்கிவிட முயன்றதை எதிர்த்துப் போராடித் திருஞானசம்பந்தர் பழஞ் சமயத்தை நிலை நிறுத்தினார். சேக்கிழார் காலத்தில் அச் சைவம் நன்கு நிலை பெற்றிருப்பினும் உள்ளீடற்றதாகப் போய் விட்டது. எனவே அச் சைவ சமயம் மறுபடியும் தொண்டு, அன்பு என்ற இரண்டின் மேல் நிற்குமாறு செய்தால்தான் உண்மையில் தழைக்கும் என்பதை உணர்ந்த சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாட எடுத்துக்கொண்டார். தனி அடியார்களாக உள்ள 63 பேர்கள் அனைவரும் சைவ அன்பர்கள், சிவபெருமானிடத்து எல்லையற்ற அன்புடையவர்
பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf/288
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
